Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கொடைக்கானலில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு "சீல்'

Print PDF

தினமணி               03.02.2014

கொடைக்கானலில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு "சீல்'

கொடைக்கானலில் வாடகையை செலுத்தாத நகராட்சிக் கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கொடைக்கானல் நகராட்சிக்கு, ஏரிச்சாலை, பூங்கா சாலை, கலையரங்கம் சாலை, அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் பல மாதங்களாக நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய வாடகை பாக்கித் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இது குறித்து, நகராட்சி ஆணையர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 16 கடைக்காரர்கள் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தனர்.

எனவே, இந்த கடைகளை பூட்டி சீல் வைக்க, நகராட்சி ஆணையர் (பொறுப்பு)சாகுல்ஹமீது உத்தரவிட்டார்.

அதன்படி, குறிப்பிட்ட கடைகளை நகராட்சி வருவாய் ஆய்வாளர் சத்யா ஆய்வுசெய்து, பூட்டி சீல் வைத்தார்.

இதனிடையே, கொடைக்கானல் நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் சாமுவேல், அசன், தங்கபாண்டியன் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையால், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் புகைப்பிடித்த 10 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

திண்டுக்கல் நகராட்சியில் ரூ. 98 கோடியில் மழைநீர் சேகரிப்புத் திட்டம்

Print PDF

தினமணி               03.02.2014

திண்டுக்கல் நகராட்சியில் ரூ. 98 கோடியில் மழைநீர் சேகரிப்புத் திட்டம்

திண்டுக்கல் நகராட்சிப் பகுதியில் ரூ. 98.44 கோடியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் குளம் தூர்வாரும் பணிகளுக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் குறித்து, வியாழக்கிழமை திண்டுக்கல் நகராட்சியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் வி. மருதராஜ் பேசியது: திண்டுக்கல் நகரில் உள்ள 11 குளங்களையும், 21 கால்வாய்களையும் இணைத்து, நீர் ஆதாரத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 98.44 கோடி என்றார் அவர்.

  கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தகர் சங்க மற்றும் குடியிருப்போர் சங்கப் பிரதிநிதிகள், திட்டம் அறிவிப்போடு நின்றுவிடாமல் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கருத்துத் தெரிவித்தனர்.

  மேலும், குளத்தில் சேகரிக்கப்படும் தண்ணீரில் கழிவுநீர் கலக்காமல், சுத்தமாக பராமரித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

  இத்திட்டத்துக்காக 310 கிலோ மீட்டர் தூரம் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. மேலும், 117 கிலோ மீட்டர் தூரம் உள்ள பழைய கால்வாய்களை புனரமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளதாக, அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

 

காலியிடங்களில் புதர் இருந்தால் மாநகராட்சி அகற்றும்: மேயர்

Print PDF

தினமணி               03.02.2014

காலியிடங்களில் புதர் இருந்தால் மாநகராட்சி அகற்றும்: மேயர்

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள காலியிடங்களில் புதர்கள் இருந்தால், அவற்றை மாநகராட்சியே அகற்றும் என மேயர் செ.ம. வேலுசாமி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி மாமன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுதொடர்பாக மாமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் செ.ம. வேலுசாமியின் பதில்:

குடியிருப்புகள் உருவாகும்போது வீட்டு மனையைப் பலர் வாங்குகின்றனர். ஒரு சில இடங்களில் வீடுகள் கட்டிக் குடியேறுகின்றனர். அவ்வாறு குடியேறும்போது பல இடங்களில் 4 வீடுகளுக்கு நடுவில் காலியிடம் உள்ளது.

அந்தக் காலியிடத்தில் புதர்கள் உருவாகின்றன. இதனால் அதில் பாம்பு உள்ளிட்டவை குடியேறுகின்றன. இதனால் வீடுகளில் குடியிருப்போருக்குத் தொல்லைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு காலியாக இருக்கும் இடத்தின் உரிமையாளர்களுக்கு முதலில் மாநகராட்சியின் சார்பில் நோட்டீஸ் அனுப்பலாம். புதர்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர் அகற்றாவிட்டால் மாநகராட்சியே அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

சம்பந்தப்பட்ட காலியிடத்தின் உரிமையாளர்கள் கட்டடம் கட்டுவதற்கு மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கும்போது, புதர்களை அகற்றியதற்கான கட்டணத்தையும் சேர்த்து வசூலிக்கலாம் என்றார் மேயர்.

 


Page 108 of 3988