Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை அமைக்க நகராட்சி தீர்மானம்

Print PDF

தினமலர்             01.02.2014

பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை அமைக்க நகராட்சி தீர்மானம்

துறையூர்: துறையூர் நகராட்சி கூட்டம் தலைவர் முரளி, தி.மு.க., தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் திவ்யா அ.தி.மு.க., இன்ஜினியர் ரவி ச்சந்திரன், கவுன்சிலர்கள்பங்கேற்றனர். கூட்டத்தில் துறையூர் பஸ்ஸ்டாண்டில், 40 ஆண்டு பழமையான மேற்கூரை தம்மம்பட்டி, பெரம்பலூர் பஸ் நிற்கும் வடபுறமும், திருச்சி, நாமக்கல் பஸ் நிற்கும் தென்புறமும், இருந்த மேற்கூரை கீழே விழுந்து இரண்டு ஆண்டு ஆகிறது. மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டனர். மேற்கூரை அமைக்க பலமுறை வலியுறுத்தியும், இதுவரை அமைக்கப்படாமல் இருந்தது.

பஸ்ஸ்டாண்டில் கழிவறை, பயணிகள் ஓய்வறை, தரைகள், கழிவு நீர்கால்வாய் பழுதாகி அனைத்தும் புதுப்பிக்க, 77 லட்ச ரூபாய் திட்டமதிப்பீடு தயார் செய்து அனுப்பி மூன்று ஆண்டாகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. தற்போது மேற்கூரை புதிதாக அமைக்க, 20 லட்ச ரூபாய் திட்ட நிதி வந்துள்ளது. இதில் பணிகள் செய்வது உட்பட அனைத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

 

விசில் அடித்து குப்பை பெறும் திட்டம் : மாநகராட்சி பகுதியில் அறிமுகமாகிறது

Print PDF

தினமலர்             01.02.2014

விசில் அடித்து குப்பை பெறும் திட்டம் : மாநகராட்சி பகுதியில் அறிமுகமாகிறது

திருப்பூர் : மாநகராட்சி பகுதியில், வீடு வீடாக வந்து, விசில் அடித்து குப்பை பெறும் திட்டம், வரும் 2ம் தேதி முதல் துவங்க உள்ளது. முதல்கட்டமாக, இரு மண்டலங்களில் மட்டும் தனியார் நிறுவனம் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வரும் 2ல், எம்.எஸ்., நகரில் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. இப்பணி மேற்கொள்ளப்படும் விதம் குறித்து, அந்நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடேஸ்வரன், படக்காட்சி மூலம் விளக்கினார். மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மண்டல மற்றும் நிலைக்குழு தலைவர்கள், சுகாதார பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

முதல்கட்டமாக, 781 துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 600 தள்ளுவண்டிகள் மூலம் 4 பச்சை (மக்காத குப்பை), 2 சிவப்பு (மக்கும் குப்பை) நிற கண்டெய்னர் வைத்து, வீடு வீடாகச் சென்று விசில் அடித்து குப்பை சேகரிப்பர். அவை பகுதிவாரியாக உள்ள தலா 1100 லி., கொள்ளளவு கொண்ட குப்பை தொட்டிகளில் சேகரிக்கப்படும். பின், அவை பகுதிவாரியாக 8 கியூபிக் (8 வண்டிகள்) மற்றும் 14 கியூபிக் காம்பாக்டர் (4 வண்டிகள்) பொருத்திய வாகனங்கள் மற்றும் 10 டிப்பர் ஆட்டோக்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இவை தவிர, லோடர், கால்வாய் சுத்தம் செய்யும் அதிநவீன கிரேன் ஆகியனவும் பயன்படுத்தப்பட உள்ளன.

வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

ஊழியர்கள் வருகை பயோமெட்ரிக் முறையிலும், வாகனங்கள் செல்வது ஜி.பி.ஆர்.எஸ்., முறையிலும் கண்காணிக்கப்படும். குப்பை தொட்டிகளில் ஆர்.எப்.ஐ.டி., முறையில் குப்பை போடுதல் மற்றும் நிரப்பும் பணியும், சுத்தம் செய்யப்பட்ட வீதிகளில், கண்காணிப்பாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, படம் பிடித்தும் "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யப்படும். மாநகராட்சி கமிஷனர் அறையிலிருந்தபடி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஊழியர் பணியாற்றுவர். காலை 6.00 முதல் பகல் 2.00 மணி வரை முழு அளவிலும், 2.00 முதல் 5.00 மணி வரை ரிசர்வ் ஊழியர்களும் பணியில் இருப்பர். மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்கள் இரவிலும் சுத்தம் செய்யப்படும், என்றார்.

 

"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Print PDF

தினமலர்             01.02.2014

"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், பொதுமக்களின் வசதிக்காக,"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 3ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவதற்காகவும்; புகார்களை தெரிவிக்கவும் பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக, இருப்பிடத்திலேயே தகவலை அறிந்து கொள்ளும் வகையில்,"குறுந்தகவல் சேவைத்திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வீண் அலைச்சல் தவிர்க்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இதன் துவக்க விழா நேற்று நகராட்சி வளாகத்தில் நடந்தது.

நகராட்சித்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். கமிஷனர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொதுமக்களின் வசதிக்காக "குறுந்தகவல் சேவை திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொள்ளாச்சி நகராட்சியின் சேவைகளை பெற மொபைலிலிருந்து, "GRV ' என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு, தங்கள் கோரிக்கைகளை பதிவு செய்து, 98652 55510 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின், பதிவு எண்ணிட்டு ஒப்புகை குறுந்தகவல் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தங்கள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் மீண்டும் குறுந்தகவல் மூலம் தங்களுக்கு தெரிவிக்கப்படும்.வரியினங்களின் நிலுவைத்தொகை விவரம் குறுந்தகவல் அனுப்பினால், வரி நிலுவை உடனடியாக தங்களுக்கு கிடைக்கும்.சொத்து வரி மற்றும் காலியிட வரிக்கு,HT (Space) (Assessment No), குத்தகை இனத்திற்கு NT(Space) (Assessment No)என்றும், WT(Space) (Assessment No) என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

சேவைகளை குறுந்தகவல் மூலம் மட்டுமே பெற முடியும். இந்த எண்ணில் பேசுவதற்கான வசதியில்லை. இதுதவிர, தெருவிளக்கு கோரிக்கை, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஜிஆர்வி என டைப் செய்து சம்பந்தப்பட்ட கோரிக்கை மற்றும் தெரு பெயர் அல்லது தெருவிளக்கு எண்ணை அனுப்பலாம்.இந்தத்திட்டம் வரும் 3ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. ஏப்., 1ம்தேதி முதல் கட்டண தொகை குறித்த விவரம் அச்சிட்ட தாளில் வழங்கப்படாமல், குறுந்தகவல் மூலமே வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 


Page 109 of 3988