Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

3 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு

Print PDF

தினமணி             01.02.2014

3 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு

விழுப்புரத்தில் காட்பாடி ரயில்வே கேட் உள்ளிட்ட 3 பகுதிகளில் ரூ.17.52 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த நகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நகராட்சிக் கூட்டம், தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட புறவழிச் சாலை, எல்லீஸ் சத்திரம் சாலை, மாவட்ட பெருந்திட்ட வளாகம் செல்லும் சாலை சந்திப்பு பகுதிகளில் போதுமான மின் விளக்கு வசதிகள் இல்லாததால் அவ்வப்போது வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தப் பகுதிகளில் 7 குழல் விளக்குகள், 6 சோடியம் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கோலியனூர் காய்வாயை சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் 10 பணியாளர்களை நியமிப்பது, கட்டபொம்மன் நகர் பகுதியில் ரூ.1.45 லட்சத்தில் தார்ச் சாலை அமைப்பது, விஐபி நகர் மேற்கு பகுதியில் ரூ.1.80 லட்சத்துக்கு தார்ச் சாலை அமைப்பது, பி.ஜே.என். சாலை, சென்னை சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே கேட், திருச்சி சாலையில் உள்ள ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் தலா ரூ.5.84 லட்சம் செலவில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் வார்டுகளுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதேபோல் தங்கள் பகுதியில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.

 

ரூ.18 லட்சம் நிதியில் வளர்ச்சிப் பணிகள்: திண்டிவனம் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமணி             01.02.2014

ரூ.18 லட்சம் நிதியில் வளர்ச்சிப் பணிகள்: திண்டிவனம் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

திண்டிவனத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கி, நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டிவனம் நகர்மன்றக் கூட்டம், தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகர்மன்ற துணைத்தலைவர் ஏ.வி.முகமதுஹரிப் உள்பட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 6 வார்டுகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்க ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதியும், காட்ராம்பாக்கம் தலைமை நீரேற்று நிலையத்தில் உடைந்த இணைப்பு குழாய் சரி செய்ய ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதியும், வார்டு எண் 10-ல் வடிகால் வசதி அமைத்து தர ரூ.2 லட்சம் நிதியும், காவேரிப்பாக்கம் தொடக்கப்பள்ளி மராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.7 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது.

நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் தேவையான மின் வசதி, குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க ரூ. 2 லட்சம் ஒதுக்கப்பட்டது. கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

முதல்வருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி

Print PDF

தினமணி             01.02.2014

முதல்வருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் நன்றி

சிதம்பரம் நகர புதை சாக்கடை விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.75 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து,  நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம், தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்தில் புதை சாக்கடை விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.75 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

  கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:  ஜி.செல்வராஜ் (மூமுக)- ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதை குழாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

 ஆ.ரமேஷ் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): புதை குழாய் திட்டத்தை காரணம் காட்டி நகராட்சி நிர்வாகம் மக்கள் மீது எந்த வரியையும் சுமத்தக் கூடாது. புதிய இணைப்பிற்கு புதிய வரி விதிப்பு கூடாது. பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டடத்தை புதுப்பித்துத் தர வேண்டும். சாலைகளைச் சீரமைக்க வேண்டும்.  வக்காரமாரி நீர் தேக்கத்தில் உள்ள குளத்தின் மேற்கு கரையை உயர்த்தி அதிகளவு நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ்: 2014-15 ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. எனவே நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுக்குத் தேவையான பணிகள் குறித்து மார்ச் 3-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

 பெரு.திருவரசு (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)- சிதம்பரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நிற்க முடியவில்லை. மேலும் இலவச கழிப்பறை செயல்பாடின்றி உள்ளது. இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

 தலைவர்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பஸ் நிலையத்தில் புதிய இலவச கழிப்பறை கட்டப்படும்.

 அப்புசந்திரசேகரன் (திமுக): சிதம்பரம் மேலவீதி நீர்த் தேக்க தொட்டி 1915-ம் ஆண்டு திவான் பகதூர் ராமசாமி செட்டியாரால் கட்டப்பட்டது. தற்போது இந்த ஆண்டு நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், ராமசாமி செட்டியாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். நகரில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும்.

 கூட்டத்தில் ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், மேலாளர் ராமஜெயம், மின் கண்காணிப்பாளர் ஷேக்மொகைதீன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 


Page 110 of 3988