Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

புதிய மீன் மார்க்கெட் இன்று முதல் முழுமையாக இயங்கும்

Print PDF

தினமணி             01.02.2014

புதிய மீன் மார்க்கெட் இன்று முதல் முழுமையாக இயங்கும்

வேலூர் மக்கான் அருகே அமைந்துள்ள புதிய மீன்மார்கெட்டில் உள்ள கடைகள் பிப்ரவரி 1 முதல் முழுமையாக இயங்கும். பழைய மீன்மார்க்கெட் வெள்ளிக்கிழமையுடன் மூடப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் மீன்மார்க்கெட் வியாபாரிகள் பழைய மீன் மார்க்கெட்டில் இருந்த தளவாடங்களை வெள்ளிக்கிழமை அகற்றி புதிய இடத்துக்கு கொண்டு சென்றனர். இஸ்லாமிய மத வழக்கப்படி கடைகள் திறப்புக்கான பூஜைகளும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் மீன்மார்க்கெட் புதிய இடத்தில் முழுமையாக செயல்படவுள்ளது.

 

தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை

Print PDF

தினமணி             01.02.2014

தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை

ராணிப்பேட்டையில் அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் சித்ரா சந்தோஷம் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகராட்சி வளாகத்தில் உள்ள ஏ.பி.முகம்மது சுலைமான் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜே.பி.சேகர், ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

இசட்.அப்துல்லா (திமுக):எனது வார்டில் குடிநீர் பிரச்னை தலைதூக்கி வருகிறது. கோடையில் தண்ணீர் பிரச்னை மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும்.

டி.ராமதாஸ் (பாமக): ராணிப்பேட்டையிலும் நகராட்சி சார்பில் மின் தகனமேடை அமைக்க வேண்டும்.

ஆர்.இ.எழில்வாணன் (திமுக): நகர பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தலைவர் சித்ரா சந்தோஷம்:  நகராட்சிக்குள்பட்ட 30 வார்டுகளிலும் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தடையின்றி குடிநீர் கிடைக்க தேவையான பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், லாரிகள் மூலமாகவும் குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 நகரில் மொத்தம் 24 பொதுக் கழிப்பிடங்கள் உள்ளன. இவை தவிர உலகத் தரம் வாய்ந்த சுகாதாரமான "நம்ம டாய்லெட்' என்ற நவீன கழிப்பிடங்கள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொது இடங்களிலும், பாலாற்றிலும் கொட்டுவதைத் தடுக்க மருதம்பாக்கத்தில் உள்ள நகராட்சிக் குப்பை கிடங்குக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று அங்கு பாதுகாப்பாகத் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

 

பல்லடம் நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

பல்லடம் நகர்மன்றக் கூட்டம்

பல்லடம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் பி.ஏ.சேகர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, ஆணையாளர் நாராயணன், பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

சின்னசாமி: நகரில் கொசு மருந்து அடிக்காததால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. ஆழ்குழாய்க் கிணறு அமைத்தும் மின் இணைப்புக் கொடுக்காததால் தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை.

கிருஷ்ணகுமார்: நகரில், அத்திக்கடவு குடிநீர் குறைவாக வருகிறது. நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலைய பகுதியில் இ-டாய்லெட் அமைக்கப்படவில்லை. பல்லடத்தில் எரிவாயு மயானம் அமைக்க வேண்டும்.

பொன்னுசாமி: குப்பை கொட்ட இடம் இல்லாமல் துப்புரவுப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

நாராயணன் (ஆணையாளர்): ஆழ்குழாய்க் கிணற்று தண்ணீர் விநியோகம் செய்ய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொசு மருந்து காலை 6 முதல் 7.30 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 8 மணி வரையும் அடிக்கப்படும். ஒடையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்லடத்தில் எரிவாயு மற்றும் மின் மயானம் அமைக்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் முதல் 4 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இடம் கிடைத்தால் எரிவாயு மயானம் அமைக்கலாம்.

மின்வாரிய உதவிப் பொறியாளர் (நகரம்): 15 நாட்களுக்குள் ஆழ்குழாய்க் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

சேகர் (தலைவர்): பல்லடத்திற்கு வரும் அத்திக்கடவு குடிநீர்க் குழாயில் நீர்க் கசிவால் தண்ணீர் குறைந்துள்ளது. மேலும், இரண்டாவது திட்டத்திற்கு இருகூர் பிரிவு வரை குழாய் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப் பணி 6 மாதத்தில் முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

 


Page 112 of 3988