Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அரசுப் பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

Print PDF

தினமணி             01.02.2014

அரசுப் பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

அரசுப் பள்ளிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என பூந்தமல்லி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பூந்தமல்லி நகராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் திருமலை தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, துணைத்தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீர்மானங்கள்: நகராட்சிக்குள்பட்ட 3 அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆகியவற்றுக்கு ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதர வேண்டும்.தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் கட்டடம் அமைக்க வேண்டும்.

நகராட்சிப் பணியாளர்களின் தகவல் பரிமாற்றத்துக்கு ரூ.7 லட்சம் செலவில் வாக்கி டாக்கிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

 

தேரடியில் மீண்டும் உயர் கோபுர மின்விளக்கு

Print PDF

தினமணி             01.02.2014

தேரடியில் மீண்டும் உயர் கோபுர மின்விளக்கு

திருவள்ளூர் தேரடியில் கோயில் தேர் செல்வதற்கு இடையூறாக இருந்ததாக அகற்றப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு, மாற்று இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரின் மையத்தில் உள்ளது தேரடி பகுதி. இப்பகுதி வழியாக திருவள்ளூரிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு வந்துதான் செல்ல வேண்டும்.

மேலும் இப்பகுதியிலிருந்து செங்குன்றம் சாலை, ஆவடி சாலை, பனகல் தெரு, ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளுக்கு சாலைகள் செல்கின்றன.

இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் அங்கு ஏராளமான சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தன.

இதனிடையே மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2012-ஆம் ஆண்டு திருவள்ளூர் நகராட்சி சார்பில் தேரடி பகுதியில் ரூ.1 லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் போது அப்பகுதியில் ஸ்ரீவீரராகவர் கோயில் தேரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பகுதியிலிருந்த உயர்கோபுர மின்விளக்கு அகற்றப்பட்டது.

இதையொட்டி அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கை மீண்டும் அமைக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேரடி பகுதியை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத்தினர், சாலையோரம் இருந்த கொடிக்கம்பம், கல்வெட்டுகளை அகற்றி அந்த இடத்தில் மின்விளக்கை அமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அங்கு அமைக்கப்பட்டது.

அதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையர் கே.அட்சய்யா, நகராட்சிப் பொறியாளர் பாபு, நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

மின் இணைப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமணி             01.02.2014

மின் இணைப்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் தீர்மானம்

தொல்லியல் துறையின் தடையை நீக்கி மாமல்லபுரத்தில் மின் இணைப்பு வழங்க ஆணை பிறப்பித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து  பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாமல்லபுரம் சிறப்புநிலைப் பேரூராட்சியில் மன்ற கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் எம்.கோதண்டபாணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் என்.எம். முருகன், கவின்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் 2010 தொல்லியில் சட்டவிதிப்படி மாமல்லபுரத்தில் மின் இணைப்பு வழங்க தொல்லியல் துறை தடை விதித்திருந்தது.

இதையடுத்து தொல்பொருள் துறை சட்டத்தில் ஆட்சேபனை இல்லாத விதியினைத் தளர்த்தி ஆய்வு செய்த முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்பட தமிழகம் முழுவதும்  தொல்லியல் துறை கட்டுபாட்டில் உள்ள பகுதிகளில் மின் இணைப்பு வழங்கலாம் என்று ஆணை பிறப்பித்தார். அதையடுத்து தற்போது மாமல்லபுரத்தில் கடந்த 4 ஆண்டகளாக நிறுத்தி வைக்கப்பட்ட மின் இணைப்பு, விண்ணப்பிக்கும் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த முதல்வருக்கு  பாராட்டு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மாமல்லபுரம் மக்களின் நலன் கருதி வரும் கோடைகாலத்தில்  குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைப்பது என்றும், 2 சிமென்ட் சாலை விரிவாக்கம் என ரூ.21 லட்சம் இப்பணிகளை செயல்படுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தற்போது கோவளம் சாலையில்  மீன் இறைச்சி, காய்கறி கடைகள், பல்பொருள் அங்காடி கடைகள் கட்டுவதற்கு ரூ.80 லட்சத்தில் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 


Page 114 of 3988