Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம்: 25-ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி             01.02.2014

பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம்: 25-ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் பிறந்த நாளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு சென்னை மாநகராட்சி வழங்கும் ரூ. 10 ஆயிரத்தை பெற பிப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாள் வரும் பிப். 24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு 66 வகையான முகாம்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.

இதில் முதல்வர் பிறந்த நாளில் பிறந்த மற்றும் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் பிப்ரவரி 24-ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைகளுக்கும், வரும் 24-ஆம் தேதி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கும், அவர்களுடைய பெயரில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். இந்தப் பரிசுத் தொகையை பெறுவதற்கு உரிய பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பிப். 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் (குடும்பநலம்) துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேனியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்             01.02.2014

தேனியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தேனி, : தேனியில் நகராட்சி ஆணையர் தலை மையில் நடந்த ஆய்வில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் திடீரென பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பாலித்தீன் பைகள் உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் தேனி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று தேனி-அல்லிநகரம் நக ராட்சி ஆணையர் ராஜா ராம் தலைமையில் சுகாதார அலுவலர் சுருளிநாதன், சுகாதார ஆய்வாளர்கள் சுருளியப்பன், மணிகண்டன் ஆகியோர் தேனி கடற்கடை நாடார் சந்து, தேனி நகர் மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் உள்ள பழக்கடைகள், பேன்சி கடைகள், மொத்த வியாபார கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில் கடற்கரை நாடார் தெருவில் இருந்த மொத்த வியாபார கடைகளில் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனை செய்ததற்காக 3 மொத்த வியாபாரிகளுக்கு தலா ரூ.500 வீதமும், ஒரு சில்லரை வியாபாரிக்கு ரூ.100 என மொத்தம் ரூ.1600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

 

இனி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சுவையானகுடிநீர் கிடைக்கும் சுத்திகரிப்பு கலன் அமைக்க ரூ.19 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினகரன்             01.02.2014

இனி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சுவையானகுடிநீர் கிடைக்கும் சுத்திகரிப்பு கலன் அமைக்க ரூ.19 லட்சம் ஒதுக்கீடு

திண்டுக்கல், : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.19 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்வோருக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என பொதுமக்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு உள்ளது. பயணிகள், தனியாருக்கு சொந்தமான கட்டண கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.

பஸ் ஸ்டாண்டில் ஒரே ஒரு இடத்தில் சின்டெக்ஸ் தொட்டி வைத்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே தண்ணீர் வரும். சுத்தமான குடிநீர் கிடைக்காததால் கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் சென்றது.

இதையடுத்து பஸ் ஸ்டாண்டை நவீனப்படுத்தி அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன் நவீன வசதிகளுடன் கூடிய ஆண், பெண் இலவச கழிவறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இரண்டு சுத்திகரிப்பு கலன் பஸ் ஸ்டாண்டிற்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.  இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஓரிரு வாரத்திற்குள் சுத்திகரிப்பு குடிநீர் கலன் அமைக்கப்படும் என்றார்.

 


Page 115 of 3988