தினகரன் 01.02.2014
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம்
திருக்காட்டுப்பள்ளி, : தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம் தலைவர் மங்கையற்கரசி தலைமையில் நேற்று நடந்தது.
துணைத் தலைவர் இளவரசி, செயல் அலுவலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். திமுக உறுப்பினர்கள் திவ்யா, தனலெட்சுமி, மாரியப்பன், சரவணகுமார், சங்கர் அதி முக உறுப்பினர்கள் பிரபு, ராஜேஷ்கண்ணன், செல்வப்பிரியா, நல்லேந்திரன், நக்கீரன், பொன்னரும்பு, தன்ராஜ், முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண் டனர். கூட்ட பொருட்களை இளநிலை உதவியாளர் வைரக்கண்ணு வாசித்தார். கூட்டத்தில் குடமுருட்டி லயன் கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையின் தென்பகுதியில் தரை தளம் சிமெண்ட் பிளாக் அமைப்பது, பேரூராட்சி 15 வார்டுகளில் இறந்தவர்களை அடக்கம் செய்ய அமரர் ஊர்தி வாகனம் வாங்குவது, ஒன்பத்து வேலி தைக்கால் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.