Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பண்ருட்டி பகுதியில் அரசு பெண்கள் பள்ளி 3ம் தேதி ஆலோசனை கூட்டம்

Print PDF

தினகரன்             01.02.2014

பண்ருட்டி பகுதியில் அரசு பெண்கள் பள்ளி 3ம் தேதி ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி, : கடந்த சில ஆண்டுகளாக பண்ருட்டி நகராட்சி பகுதியில் பெண்களுக்கென தனியாக அரசு பள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதன் விளைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காப்பு தொகை ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டது.

ஆனால் அதற்கான தொடர் முயற்சி எடுக்காததால் திட்டம் கைவிடப்பட்டது. நகராட்சி பள்ளிகளில் குறைந்த அளவே மாணவர்கள் சேர்கின்றனர். விழமங்கலத்தில் உள்ள நகராட்சி பள்ளி மாணவர்களை மற்றொரு நகராட்சி பள்ளியில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலியாக உள்ள விழமங்கலம் நகராட்சி பள்ளியை பெண்களுக்கென தனி பள்ளியாக அமைய ஏற்ற இடமாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்தபோது, பண்ருட்டியில் பெண்கள் பள்ளி தனியாக அமைவதற்கு போதிய அளவிலான இடவசதியை நகராட்சி செய்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே இது சம்பந்தமாக விவரமான அறிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. வரும் 3ம் தேதி சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் கூறும் போது, கல்வி சம்பந்தமாக கேட்கப்படும் இடவசதிகள் உடனடியாக செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு பள்ளிக்கு தேவையான இடத்தை சட்டப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம், என்றார். 

உடனடியாக பெண்களுக்கான அரசு பள்ளியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

நாளை முதல் மாநகராட்சி முக்கிய பகுதியில் 24 மணி நேரமும் தனியார் மூலம் துப்புரவு பணி

Print PDF

தினகரன்             01.02.2014

நாளை முதல் மாநகராட்சி முக்கிய பகுதியில் 24 மணி நேரமும் தனியார் மூலம் துப்புரவு பணி

திருப்பூர், :மாநகராட்சியில் 2 மற்றும் 3வது மண்டலங்களுக்கு உட்பட்ட 16வது வார்டு முதல் 45வது வார்டு வரை உள்ள 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு விடப்பட்டுள்ளது. சீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திருப்பூரில் உள்ள 2 மண்டலங்களில் இந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த 2 மண்டலங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் சேகரமாகும் குப்¬ பகள் தினமும் 600 தள்ளுவண்டிகள் மூலம் சேகரிக்கப்படும்.இந்த ஒவ்வொரு குப்பை தொட்டிகளிலும் ரேடியோ அதிர்வின் அடையாள அட்டை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தொட்டிகளின் இருப்பிடம் மற்றும் பிற தகவல்கள் இணையதளம் மூலம் கண்காணிக்க முடியும். தெருக்க¬ ளயும், கழிவுநீர் கால்வாய்களையும் துப்புரவுபடுத்தும் பணியும் தினமும் நடக்கும். மேலும் சாலையோரங்களில் உள்ள புல் போன்ற செடிகள், மண் போன்றவை அவ்வப்போது அப்புறப்படுத்தப்படும்.

இந்த பணிக்காக அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் 781 துப்புரவு பணியாளர்களை தனியார் நிறுவனம் நியமித்து உள்ளது. இந்த பணியாளர்களுக்கு தேவை யான சீருடை பாதுகாப்பு சாதனங்கள் பணிக்கான கருவிகள் போன்றவற்றையும் அவர்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள்.

இந்த 30 வார்டுகளிலும் 3,200க்கும் மேற்பட்ட தெருக்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தெருக்களின் நிலையும் தினமும் இணையதளத்தில் கண்காணிக்க முடியும். இந்த பணிக்காக 26 நவீன வாகனங்களை இந்த நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்த வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்.கருவி பொருத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். முக்கிய பகுதிகளான பஸ் நிலையங்கள், மார்க்கெட், மற்றும் பிரதான சாலைகளிலும் ஆட்டோக்கள் மூலம் 24 மணி நேரமும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும்.

இதுதவிர இந்த தனியார் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களின் வருகை பதிவேடுகளும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். பணியாளர்களின் வருகை பதிவுகள், வாகனங்களின் செயல்பாடுகள், குப்பை தொட்டிகளின் தகவல்கள் போன்ற அனைத்து தகவல்களும், இருந்த இடத்தில் இருந்தே இணையதளம் மூலம் 24 மணி நேரமும் மாநகராட்சி நிர்வாகத்தால் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் சுகாதாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க தனியார் நிறுவனத்தினர் இலவச தொலை பேசி எண்ணை ஏற்பாடு செய்துள்ளனர்.

பொதுமக்கள் தெரிவிக்கு ம் புகார்களை அவர்கள், ஒரு மணி நேரத்தில் சரி செய்வார்கள். அவ்வாறு சரிசெய்யவில்லை எனில், தனியார் நிறுவனத்தினருக்கு அபராதம் விதிக்கப்படும். குப்பைகள் தனியாரிடம் ஒப்படைக்கும் விழா நாளை (2ம் தேதி) காலை 10.30 மணிக்கு 2வது மண்டலத்துக்கு உட்பட்ட எம்.எஸ்.நகரில் நடைபெறும்.

 

திருச்சியில் 28ம் தேதி வரை சொத்துவரி தீவிர வசூல் முகாம்குடிநீர் கட்டணமும் கட்ட பொதுமக்களுக்கு அழைப்பு

Print PDF

தினகரன்             01.02.2014

திருச்சியில் 28ம் தேதி வரை சொத்துவரி தீவிர வசூல் முகாம்குடிநீர் கட்டணமும் கட்ட பொதுமக்களுக்கு அழைப்பு

திருச்சி, : திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், புதை வடிகால் கட்டணம் மற்றும் வரியில்லா இனம் வசூல் செய்ய தீவிர வரிவசூல் முகாம் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.    
     
திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சி சட்டம் 126 பிரிவின்படி ஒவ்வொரு அரையாண்டுக் கும் சொத்துவரியை அரை யாண்டு துவங்கி 15 நாட்களுக்குள் செலுத்த வேண் டும். குடிநீர் கட்டணங் களை 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். வரும் 28ம் தேதி வரை தீவிர வரிவசூல் முகாம் நடக்கிறது. இதில் மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், புதை வடிகால் சேவை கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி போன்ற அனைத்து நிலு வையில் உள்ள வரி இனங் கள், வரியில்லா இனங்களை 2013-2014ம் ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் அரை யாண்டு வரையிலான வரியினங்களை ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் ஆகிய கோட்ட அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களில் செலுத்த வேண்டும். அல்லது தஞ்சா வூர் ரோடு அரியமங்கலம் வார்டு அலுவலகம், விறகுபேட்டை நீர்த்தேக்க தொட்டி, சுப்ரமணியபுரம் வார்டு அலுவலகம், மேலகல்கண்டார்கோட்டை வார்டு அலுவ லகம், கே.கே.நகர் வார்டு அலுவலகம், கள்ளத்தெரு வார்டு அலுவலகம், நந்திகோவில் தெரு வார்டு அலுவலகம், தேவர் ஹால், திருவெறும்பூர் வார்டு அலுவ லகம் ஆகிய இடங்களில் உள்ள வசூல் மையங்களில் செலுத்த வேண்டும்.

வசூல் மற்றும் சேவை மையங்கள் பொதுமக்க ளின் வசதிக்காக அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 முதல் மாலை 6.00 மணி வரையிலும் (சனிக்கிழமை உட்பட), ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை செயல்படும். அனைத்து வார்டு பகுதி மக்களும் தங்களுடைய வரி மற்றும் வரி யில்லா இனங்களை செலுத்தலாம். எனவே தீவிர வரி வசூல் முனைப்பு காலமான வரும் 28ம் வரை மாநகராட்சிக்கு செலுத்த வேண் டிய நிலுவையில் உள்ள வரிகள் மற்றும் நடப்பில் உள்ள வரிகளை செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைத்து ஜப்தி மற்றும் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு துண் டிப்பு போன்ற நடவடிக்கை களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

 


Page 117 of 3988