Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஓசூரில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை

Print PDF

தினத்தந்தி                30.01.2014

ஓசூரில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை

ஓசூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமு, கமிஷனர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 200 பேருக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் தணிகாசலம், கவுன்சிலர் நாராயணரெட்டி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

தஞ்சை நகராட்சி பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணி நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி                30.01.2014

தஞ்சை நகராட்சி பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணி நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தொடங்கி வைத்தார்

தஞ்சை நகராட்சி பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் தார்சாலைகள் அமைக்கும் பணியை நகரசபை தலைவி சாவித்திரிகோபால் நேற்று தொடங்கிவைத்தார்.

தார்சாலை

தஞ்சை நகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள பல்வேறு சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகளை தார்சாலைகளாக மாற்ற நகராட்சி முடிவு செய்தது. அதன்அடிப்படையில் தமிழ்நாடு நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.14 கோடியே 21 லட்சம் மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது இந்த பணி தஞ்சை நகராட்சி 35-வது வார்டில் உள்ள விக்டோரிநகர் ஆதிசேசன் தெருவில் பூமிபூஜையுடன் நேற்று தொடங்கியது. இந்த பணிகளை தஞ்சை நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தொடங்கி வைத்து பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் முத்துலட்சுமி மற்றும் சங்கீதபிரியா, கவுன்சிலர் சிவக்குமார், வார்டு அ.தி.மு.க. செயலாளர் கிருபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ரூ.14 கோடி

பின்னர் நகரசபை தலைவி சாவித்திரிகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை நகராட்சி பகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ.14 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் முனுசாமி ஆகியோருக்கும், இதற்கு பரிந்துரை செய்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கத்திற்கும் தஞ்சை நகர மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தஞ்சை நகராட்சி பகுதியில் உள்ள 51 வார்டுகளில் சீரமைக்கப்படாமல் இருந்த சாலைகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தார்சாலைகளாக போடப்படுகிறது. அதன்படி 6 ஆயிரத்து 840 மீட்டர் நீளமுள்ள சாலை ரூ.2 கோடியே 72 லட்சம் மதிப்பிலும், 8 ஆயிரத்து 240 மீட்டர் சாலை ரூ.3 கோடி மதிப்பிலும், 11 ஆயிரத்து 920 மீட்டர் சாலை ரூ.4 கோடியே 26 லட்சம் மதிப்பிலும், 10 ஆயிரத்து 190 மீட்டர் சாலை ரூ.4 கோடியே 23 லட்சம் மதிப்பிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மாநகராட்சியில் 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு பரிசு

Print PDF

தினத்தந்தி                30.01.2014

மாநகராட்சியில் 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு பரிசு

வேலூர் மாநகராட்சி சார்பில், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கமிஷனர் ஜானகி தலைமை தாங்கினார். மேயர் கார்த்தியாயினி கலந்து கொண்டு, 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய, மாநகராட்சி ஓட்டுனர் சங்க செயலாளர் சுரேந்திரனுக்கு தங்கப்பதக்கம், ரூ.500 மதிப்புள்ள சேமிப்பு பத்திரத்தை வழங்கினார். அத்துடன் 15 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய 14 டிரைவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் தருமலிங்கம், மண்டலக்குழு தலைவர் குமார், என்ஜினீயர் பாஸ்கரன், ஓட்டுனர் சங்க தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் திருமலைவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 120 of 3988