Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் குடிநீர் குழாய் மாற்ற ரூ.17.20 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமலர்                30.01.2014

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் குடிநீர் குழாய் மாற்ற ரூ.17.20 கோடி ஒதுக்கீடு

குமாரபாளையம்: நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய்கள் புதிதாக மாற்றி அமைக்க, குமாரபாளையம் நகராட்சிக்கு, 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. 7.5 கி.மீ., பரப்பளவு கொண்ட இந்நகராட்சியில், நிலத்தடியில் பதிக்கப்பட்ட குடிநீர் மெயின் குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால், தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இக்குழாய்கள், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றை சரி செய்யும் வகையில், நகராட்சி பகுதியில் பதிக்கப்பட்டுள்ள அனைத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கவும், அரசு மருத்துவமனை மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றில் உள்ள நீரேற்று குழாய்கள் மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழக அரசு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

நகராட்சி கமிஷனர் சங்கரன் கூறியதாவது:

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடியில் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் உறுதித்தன்மை இழந்ததால், அதிக அளவில் பழுது ஏற்பட்டு குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அவற்றை சரி செய்யும் வகையில், திட்டம் தயார் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டது. அதன் அடிப்படையில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பணி விரைவில் துவங்கப்படும். இப்பணி முழுமை அடையும்போது, நகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு எவ்வித தடையும் இன்றி, குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

திடக்கழிவு மேலாண்மை பணி இன்று துவங்கும்

Print PDF

தினமலர்                30.01.2014

திடக்கழிவு மேலாண்மை பணி இன்று துவங்கும்

சேலம்: சேலம் மாநகராட்சிக்கும், திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இன்று முதல் செட்டிச்சாவடியில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் துவங்க உள்ளது. சேலம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து, பயன்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டது. அஞ்சர் என்ற நிறுவனத்தின் மூலம், செட்டிச்சாவடியில் மையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. இங்கு மின்சார கட்டணம், 5.70 லட்ச ரூபாய் செலுத்தாமல் நிலுவையில் இருந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால், கடந்த சில நாட்களாக இந்நிறுவனம் செயல்படவில்லை. இதனால், குப்பைகள் ஏராளமாக தேங்க துவங்கியது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் அசோகன், ஆர்.டி.ஓ., சதீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில், திடக்கழிவு மேலாண்மை திட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று மாலை வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையில், நிலுவை மின் கட்டணத்தை மாநகராட்சி செலுத்தி விட்டு, அந்நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையில் பிடித்தம் செய்து கொள்வது, என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று காலை முதல், செட்டிச்சாவடியில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் துவங்கும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாபநாசம் பேரூராட்சி கூட்டம் ரூ.26 லட்சத்தில் தார்சாலை அமைக்க தீர்மானம்

Print PDF

தினகரன்                30.01.2014

பாபநாசம் பேரூராட்சி கூட்டம் ரூ.26 லட்சத்தில் தார்சாலை அமைக்க தீர்மானம்

பாபநாசம், : பாபநாசம் பேரூராட்சி கூட்டத்தில், ரூ.26லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 பாபநாசம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் மனோகர், துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். திருப்பாலத்துறை எஸ்.பி.ஜி மிஷின் தெரு, காளியம்மன் கோயில் தெருக்களில் 2013-14 நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பது, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 2013-14ம் ஆண்டு ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் அரையபுரம் மேட்டுத் தெருவில் தார்சாலை அமைப்பது, புதிய பேருந்து நிலையத்தில் நேரங் காப்பாளர் அறையும், பொது கட்டண கழிப்பறை சீரமைத்தல் பணிக்கு ரூ.2.78 மதிப்பில் ஒதுக்கீடு செய்வது, பாபநாசம் பேரூராட்சி புதிய அலுவலகத்தில் விற்பனை வரி அலுவலகம் இயங்க பேரூராட்சி இயக்குநர் அனுமதி பெற்று வாடகைக்கு விடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், உறுப்பினர்கள் மேரிஜோஸ்பின், ஜார்ஜ், சேகர், செல்வி, சுகன்யா, ஜெனட் ஆனந்தி, ஜெயராம், சபிலா, செல்வ முத்துக்குமார், அறிவழகன், சீனிவாசன், சுமதி, பால கிருஷ்ணன், சின்ன உதயா, சுகாதார ஆய்வாளர் செந்தில், குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.

 


Page 123 of 3988