Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சூரிய குளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமணி                30.01.2014

சூரிய குளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு

சூரிய குளத்தை தூய்மைப்படுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர் க.ஆனந்தகுமாரி தெரிவித்தார்.

ஆரணி நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் க. ஆனந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் (பொறுப்பு) பா.செல்வம், துணைத்தலைவர் தேவசேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரணி நகராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ரூ.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணியை துவக்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கவுன்சிலர் வெங்கடேசன் எழுந்து, சூரியகுளம் தூர்வாரப்பட்டு உள்ளது. இக்குளத்தை சீரமைத்து அழகுபடுத்தி படகு விடும் பணிகள் எப்போது நடைபெறும் என்றார்.

நகர்மன்றத் தலைவர்: மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சூரியகுளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி நமக்கு நாமே திட்டம் மூலம் செய்யப்பட உள்ளது.

கவுன்சிலர் வி.டி.அரசு: ஆரணியில் 180 கைப்பம்புகள் உள்ளன. 210 மினி டேங்க் உள்ளது. 5388 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. இதற்கு ஒரு பிட்டர் மட்டுமே உள்ளார். எப்போது அதிகப்படுத்தப்படும்?

ஆணையாளர் பா.செல்வம்: புதிதாக மேலும் 2 பிட்டர்கள் வந்துள்ளனர். மொத்தம் 3 பிட்டர்கள் உள்ளனர். எங்கு குழாய் பைப் பழுதானாலும் உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கவுன்சிலர் ஜோதிலிங்கம்: ஆரணி சைதாப்பேட்டையில் பாலாஜி மனைப்பிரிவில் பூங்காவுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசுப் பள்ளிக் கட்டடம் கட்ட அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆணையாளர் பா.செல்வம்: எதற்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அதற்குத்தான் அப்பணியை செய்ய வேண்டும். மாற்றி செய்யக்கூடாது. ஆகையால் பாலாஜி நகரில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா தான் அமைக்கப்படும்.

கவுன்சிலர் வி.டி.அரசு: ஆரணி நகராட்சியின் சுமார் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தகன எரிவாயு மேடை செயல்படுகிறதா?

ஆணையாளர் செல்வம்: தகன எரிவாயு மேடை அமைத்த கம்பெனியினருக்கு ரூ.15 லட்சம் பணம் தராமல் உள்ளோம். அவர்கள் சடலத்தை எரிய வைத்து பார்த்தும் சரியான முறையில் சடலம் எரியவில்லை. கம்பெனியினர் சரி செய்த பின்னர் தான் தொடர்ந்து செயல்படுத்தப்பட முடியும். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மாநகராட்சிப் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி                30.01.2014  

மாநகராட்சிப் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாநகராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை ஆட்சியர் இரா.நந்தகோபால் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

மாநகராட்சிப் பகுதியில் ஒரு சில இடங்களில் முறையான அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வந்ததை அடுத்து அவற்றுக்கு சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், வேலூர், காட்பாடி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு முறையான அனுமதி உள்ளதா, சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி தொடர்கிறார்களா என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

 

பிப்ரவரி 2 முதல் குப்பை அள்ளும் பணி தனியார் வசம்

Print PDF

தினமணி                30.01.2014  

பிப்ரவரி 2 முதல் குப்பை அள்ளும் பணி தனியார் வசம்

திருப்பூர் மாநகரில் 30 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணியை வரும் பிப்ரவரி 2-ஆம் தேதிமுதல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருக்கும் நிலையில், அதுகுறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

 திருப்பூர் மாநகரில் தினமும் 500 டன்னுக்கும் கூடுதலான குப்பை வீதிகளில் கொட்டப்படுகிறது. இக் குப்பையை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. இந் நிலையில், மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 மற்றும் 3-ஆவது மண்டலங்களில் உள்ள தலா 15 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  இந் நிலையில், வரும் பிப்ரவரி 2-ஆம் தேதியில் இருந்து இந்த 30 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக, அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியும் ஆய்வுக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில், வீதிகளில் குப்பையை அள்ளுவது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் செயல்படும் விதம் குறித்து அந் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கினர். வீடுகள்தோறும் குப்பை சேகரிப்பதைக் கண்டறிவது குறித்து மேயர் அ.விசாலாட்சி கேட்டறிந்தார்.

  குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.ஆர். கருவி பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீதிகளில் குப்பை நிரம்பியுள்ள கண்டெய்னர் கண்டறியப்படும் என்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.

 இதுகுறித்து, மேயர் அ.விசாலாட்சி கூறியது:  குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் ஒப்படைக்கப்படும். இதுதொடர்பாக அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. வியாழக்கிழமை (ஜனவரி 30), மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்களுக்கு இது தொடர்பான விளக்கக் காட்சிகளுடன் தனியார் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது என்றார்.

 


Page 128 of 3988