Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

புது பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டண கழிப்பறைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

Print PDF

தினகரன்                30.01.2014

புது பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டண கழிப்பறைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

தேனி,  : புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கட்டண கழிப்பறைகள், வாகன காப்பகங்களை அமைக்க தேனி நகராட்சி நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தேனி பை-பாஸ் ரோட்டில் கடந்த 30ம் தேதி முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. ரூ.15.50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள், 2 ஓட்டல்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கட்டணக் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதிலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக அரசிடமிருந்து பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் தற்போது, காலியிடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, தனியார் சிலர் இங்குள்ள காலியிடத்தில் வாகன காப்பகங்கள், கட்டண கழிப்பறைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் நகராட்சி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இது குறித்து நகராட்சி நிர்வாகம் ஆலோசனை செய்தது.  இதன்படி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் கட்டணக் கழிப்பறை மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடங்களை அமைக்க நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்தது.

நிபந்தனைகள்: தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920ன் படி, பஸ் ஸ்டாண்ட் அருகில் சுமார் 100 மீட்டருக்குள் தனியார் யாரும் கட்டணக் கழிப்பறைகளையோ, இரு சக்கர வாகனங்களை நிறுத்துமிடங்களையோ அமைக்கக் கூடாது என தேனி-அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 மீறி யாரேனும் கட்டணக் கழிப்பறை மற்றும் 2 சக்கர வாகனங்களை நிறத்துமிடங்களை நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.

 

கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைப்பு

Print PDF

தினத்தந்தி          29.01.2014 

கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைப்பு

கூடலூர் அண்ணா நகரில் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

பழுதடைந்த சாலை

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் குடியிருந்து வருகின்ற னர். இங்கு இருந்து அண்ணா நகருக்கு சாலை செல்கிறது. கடந்த காலகட்டங்களில் குறிப்பிட்ட சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் சேறும் சகதியும் நிறைந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் வாகனங்களும் இயக்க முடியாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கூடலூர் நகராட்சி நிர்வாகத் திடம் பொதுமக்கள் முறையீட்டனர்.

ரூ.5 லட்சத்தில் சிமெண்டு சாலை

இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் ரூ.5 லட்சம் நிதியை ஒதுக்கியது. பின்னர் கோத்தர்வயல் மெயின் ரோட்டில் இருந்து அண்ணா நகர் வரை 130 மீட்டர் தூரம் புதியதாக சிமெண்டு சாலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இதனால் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர் தோமஸ் கூறும் போது, நீண்ட காலமாக அண்ணா நகர் சாலை பழுத டைந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதியதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

அரகண்டநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினத்தந்தி          29.01.2014 

அரகண்டநல்லூரில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ஆர்.வாசிம்ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் ராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப் பட்டது. தொடர்ந்து அரகண்ட நல்லூரில் தினசரி ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைக்கு காரணமாக இருப்பது குறித்தும் விவாதிக் கப்பட் டது.

மதுக்கடையை அகற்ற தீர்மானம்

அப்போது கமிட்டியின் எதிரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங் களை ஓரமாக அமைத்திட மின்வாரியத்துக்கும், போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ள புளியமரங்களை வெட்டி அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கும் கடிதம் அனுப்புவது எனவும், அதேபோல் கமிட்டியின் எதிர்புறம் டாஸ்மாக் மது பானக் கடைகள் உள்ள தால் விளை பொருட்களை விற்கும் விவசாயிகள் சிலர் அந்த பணத்தில் குடிக்க செல்வ தால் அவர்கள் வைத் திருக்கும் பணத்தை இழந்து விடுகின்ற னர். இந்த நிலையை போக்க டாஸ்மாக் கடையை உடன் அங்கிருந்து அகற்ற வேண் டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ரத்னா, ரியாசுதீன், கோபால், சாந்தீஸ் வரி, ஜோன்ஸ், சேகர், ரேவதி, தெய்வக்கன்னு உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 134 of 3988