Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கூடலூர் நகராட்சியில் கூட்டு துப்புரவு இயக்கம்

Print PDF

தினமணி           29.01.2014 

கூடலூர் நகராட்சியில்  கூட்டு துப்புரவு இயக்கம்

கூடலூர் நகராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கூட்டு துப்புரவு இயக்கம் நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில், மேல்கூடலூர், ஓ.வி.ஹெச். சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன. சாலையோரப் புதர்கள் சுத்தம் செய்யப்பட்டன. இதில், நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எடிசன் அற்புதராஜ், ரமேஷ் மற்றும் மேற்பாற்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

 

"பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

Print PDF

தினமணி           29.01.2014 

"பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

கோவை, ஆர்.எஸ்.புரம், மாநகராட்சிக் கலையரங்கில் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் இணைந்து, மாநகராட்சிப் பகுதிகளில் மருத்துவக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாள்வது குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  • மருத்துவமனைக் கழிவுகள் மற்றும் 40 மைக்ரான் அளவுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் ஒழிப்புக்குக் கருத்துக் கேட்கப்பட்டது. சிறிய கடைகளில் ஆய்வு செய்வதும் மக்களிடம் அபராதம் வசூலிப்பதும் கூடாது; உற்பத்தியாகும் இடத்திலேயே பிளாஸ்டிக் பொருள்களைத் தடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
  • கருத்துகளைக் கேட்ட பின் மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:
  • தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவையை பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவது தான் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம். மாநகராட்சி மட்டும் தன்னிச்சையாகச் செயல்படாமல் மக்கள் கருத்தைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
  • துப்புரவுத் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து தன்னார்வ அமைப்புகளிடம் விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அனைவரும் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும்.
  • மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 10 சதவீத பிளாஸ்டிக் தான் அகற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் கருத்துக் கூறியபடி உற்பத்தியாகும் இடத்தில் பிளாஸ்டிக் பொருள்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் ஆதரவு தர வேண்டும்; வியாபாரிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும்.

 உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்புடன் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்க தனியாக மையங்கள் ஏற்படுத்தப்படும். பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

 மாநகராட்சி ஆணையர் ஜி.லதா, துணை ஆணையர் சு.சிவராசு, துணை மேயர் லீலாவதி உண்ணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி குடிநீர்த் திட்டம்: ஜப்பான் அதிகாரிகள் பார்வை

Print PDF

தினமணி           29.01.2014 

மாநகராட்சி குடிநீர்த் திட்டம்:  ஜப்பான் அதிகாரிகள் பார்வை

கோவை மாநகராட்சியின் பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டத்தை ஜப்பான் நாட்டு குடிநீர் வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.

 கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களில் பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ஆம் ஆண்டு ஜன. 24-ஆம் தேதி துவங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் கோவைக்கு நாளொன்றுக்கு 63 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கிறது. இத்திட்டம் சுரங்கப்பாதை வழியாகச் செயல்படுத்தப்படுகிறது.

 இத்திட்டத்தை பவர் பாயின்ட் மூலம் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் ஞானேஸ்வரன், ஜப்பான் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு விளக்கினார்.

 கோவை மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளை ஜப்பானிடம் இருந்து பெற உள்ளதாகவும், இங்குள்ள குடிநீர்த் திட்டங்கள் குறித்து ஜப்பான் அலுவலர்களுக்கு விளக்கப்பட்டதாகவும் ஆணையர் ஜி.லதா தெரிவித்தார்.

 ஜப்பான் குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குநர் சுகனோ தகாஷி தலைமையில் 4 பேர் கோவைக்கு வந்து பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டம் குறித்துத் தெரிந்து கொண்டனர்.

 


Page 136 of 3988