தினமணி 28.01.2014
குடியரசு தின விழா
ஆலங்குடி பேரூராட்சியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சி தலைவர் ஏ.டி. மணமோகன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
செயல் அலுவலர் மார்கண்டேயன், துணைத் தலைவர் இளங்கோ, உறுப்பினர்கள் பனையப்பன், ஆறுமுகம், கணகன், அப்துல்லா, கலிபுல்லா, அழகர் மற்றும் பணியாளர் கலந்து கொண்டனர்.