தினமணி 27.01.2014
குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு
ஆரணி நகருக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்ததையொட்டி, ஆரணியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
ஆரணி நகருக்கு சில மாதங்களுக்கு முன்பு ரூ.37 கோடியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து சனிக்கிழமை ஆணையிட்டார்.
இதையடுத்து ஆரணி நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி தலைமையிலான அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், நகரச் செயலர் அசோக்குமார், துணைத் தலைவர் தேவசேனா ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜோதிலிங்கம், அன்புஇளங்கோ, வேலாயுதம், பொன்னி பாலாஜி, ரவி, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.