Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நாமக்கல், பரமத்தியில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

நாமக்கல், பரமத்தியில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

நாமக்கல், பரமத்தி பகுதியில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தினவிழா

நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் குடியரசு தினவிழா கொண் டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப் பினர் கே.பி.பி.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சங்க வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் காந்திமுருகேசன், நகராட்சி துணை தலைவர் சேகர், கூட்டுறவு சங்கத்தின் துணை தலைவர் நல்லதம்பி மற்றும் சங்க உறுப்பினர்கள், பணி யாளர்கள் கலந்து கொண் டனர்.

நகராட்சி பள்ளி

நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கபள்ளியில் குடியரசு தினவிழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உழவன் தங்கவேலு தலைமை யில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்று பேசினார். இதில் நாமக்கல் நகராட்சி தலைவர் கரிகாலன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் நக ராட்சி கமிஷனர் (பொறுப்பு) கமலநாதன், பள்ளி கல்விக்குழு தலைவர் குப்புசாமி, மேலாண்மை குழு தலைவர் சம்பத் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். இதையொட்டி மன வளக்கலை மன்றம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியை யோகலட்சுமி நன்றி கூறினார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டா டப்பட்டது. இதையொட்டி ஒன்றிய குழு தலைவர் கவிதா சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல் லப்பன், வெங்கடாசலம் மற் றும் ஒன்றியகுழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் அருகே உள்ள சின்னமுதலைப்பட்டி நடு நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட் டது. தலைமை ஆசிரியர் மோகன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் அம்மச்சி அம்மன் அறக்கட் டளை துணை செயலாளர் முத்துசாமி, நூலகர் சுப்பிர மணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையம் அருகே உள்ள புள்ளாச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கிராம கல்விக்குழு தலைவர் ஆறுமுகம், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற் றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

தோ.ஜேடர்பாளையம்

நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் திப்பகாப் பட்டி காலனி நேருயுவக் மண்டல் இணைந்து குடியரசு தினத்தை முன்னிட்டு விளை யாட்டு போட்டிகளை நடத் தின. இதில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசு பொருட் களும், சான்றிதழ்களும் வழங் கப்பட்டது. இதில் நேருயுவ கேந்திரா சார்பில் தவமணி, ராஜசேகர், கிருஸ்துதாஸ், முன்னாள் தலைவர் சரவ ணன், தற்போதைய தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையொட்டி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் பள்ளி அளவில் நடை பெற்ற பேச்சுபோட்டி, கட் டுரை போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பரிசுகளும், சான் றிதழ்களும் வழங்கப்பட்டது.

பொன்விழா நகர் கிளை நூலகத்தில் நடைபெற்ற குடி யரசு தினவிழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் மதுரம் தலைமை தாங்கினார். நாமக் கல் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கவிதா சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் நூலக புரவலர்கள், வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பொத்தனூர் பேரூராட்சி

பொத்தனூர் பேரூராட்சி யில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பேரூராட்சி தலைவர் நாராயணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்பு கள் வழங்கினார். இதில் செயல்அலுவலர் வெங்கடே சன், துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

பாண்டமங்கலம் பேரூராட் சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பானுமதிபாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல்அலுவலர் கந்தசாமி, துணைத்தலைவர் கருணாநிதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

வெங்கரை பேரூராட்சி

வெங்கரை பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் நித்யகுமாரி விஜயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல் அலுவலர் ஞானசுந்தரம், துணைத் தலைவர் சகாதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி வேலூர் பேரூராட்சி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வேலுச்சாமி தேசிய கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் பேபிலதா, செயல்அலுவலர் குருராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி பேரூராட்சி

பரமத்தி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் உஷாராணி பாண்டி யன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். துணைத் தலைவர் பிரபாகரன், செயல் அலுவலர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பொத்தனூர் வெங்க மேடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆகிய பள்ளி களில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சி யில் பள்ளி தலைமை ஆசிரியர் கள் மாலதி, சித்தார்த்தன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

இதேபோல் நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழா கோலா கலமாக கொண்டாடப் பட்டது.

 

சேலம் மாநகராட்சி பகுதியில் 25,575 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஆணையாளர் அசோகன் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

சேலம் மாநகராட்சி பகுதியில் 25,575 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஆணையாளர் அசோகன் தொடங்கி வைத்தார்

சேலம் மாநகராட்சியில் வாக்காளர் தினவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மாபேட்டை தேர்வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் கலந்துகொண்டு சேலம் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் புதியதாக சேர்க்கப்பட்ட 25,575 வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மேலும், ‘‘வாக்களிப்பதின் முக்கியத்துவம்’’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை காந்தி மைதானம், பழைய பேருந்து நிலைய வணிக வளாகம், புதிய பேருந்து நிலையம், குரங்குச்சாவடி, சூரமங்கலம் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

கன்னியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்துக்கு செய்யும் மகத்தான தொண்டு என்ற கருத்துக்களை மையமாக கொண்ட கலைநிகழ்ச்சிகள் மற்றும் தீவிர பிரசாரப் பணிகள் 4 மண்டலங்களிலும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் உதவி ஆணையாளர்கள் கணேசன், பிரித்தி, புஷ்பவதி, ராஜா, உதவி செயற்பொறியாளர்கள் சிபிசக்ரவர்த்தி, ரவி, தேர்தல் தாசில்தார் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

நகராட்சி

தஞ்சை நகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு நகராட்சி அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

இதில் நகராட்சி பொறியாளர் சீனிவாசன், நகர்நல அலுவலர் செந்தில்குமார், மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் துணைவேந்தர் ம.திருமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து, 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் ஜெகதீசன், அரங்கசாமி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுத்தொகையை வழங்கினார். பதிவாளர் கணேஷ்ராம் வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக மாணவிகள் தற்காப்பு கலையை செய்து காண்பித்தனர். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு முதல்வர் மகாதேவன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவிற்கு துணை முதல்வர் சிவசாமி, டாக்டர்கள் சங்கரநாராயணன், நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. முடிவில் நிலைய மருத்துவ அலுவலர்கள் மனோகரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஆகன் பல்கலைக்கழக பேராசிரியர் சட்டர்ஜி மற்றும் அவருடைய மனைவி அனயுலோனாசாவேஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அரசு உயர்நிலைப்பள்ளி

குருங்குளம் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு தலைமை ஆசிரியை ஜெயம்ஜெயசீலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாலச்சந்திரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் அனுராதாமணிகண்டன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமார் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சானூரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி நந்தகுமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தகுமார், சத்துணவு அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.

நகராட்சி உயர்நிலைப்பள்ளி

தஞ்சை முனிசிபல்காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு தலைமை ஆசிரியை மேரிவிமலா தலைமை தாங்கினார். நகரசபை உறுப்பினர் சர்மிளாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கோவிந்தராசு வரவேற்றார். காந்திய மக்கள் இயக்க மாவட்ட துணைத் தலைவர் வேம்பு குடியரசு தினத்தை பற்றி பேசினார். முடிவில் ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி

தஞ்சையில் பாரதீய ஜனதா சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் ராணுவவீரர் பழனிகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தஞ்சை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பாலசெல்வம், ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைத் தலைவி தனலட்சுமி நன்றி கூறினார்.

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி வெங்கடேசா நகரில் நடந்த குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவி கீதாசேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவிற்கு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் மற்றும் கண்ணையன், சேவியர், கருப்பையா, குணசேகரன், பரமசிவம், தரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதரவற்றோர் மாணவர் இல்லம்

தஞ்சையில் உள்ள ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் விடுதிகாப்பாளர் சுடரொளி வரவேற்றார். கவுரவ செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் சாமிநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார் சிலம்ப ஆசிரியர் கோவிந்தன், தற்காப்பு கலை ஆசிரியர் முபாரக், இல்ல ஊழியர்கள் ராமதாஸ், ஆயிப்பொண்ணு மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிரசன்னா நன்றி கூறினார்.

சுவாமி விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை

தஞ்சை முனிசிபல் காலனியில் சுவாமி விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை சின்னையன் ஏற்றி வைத்தார். ஆசிரியர் பரமானந்தம் குடியரசு தினம் பற்றி பேசினார். இதில் பாலசெல்வம், சந்திரன், சாகுல்அமீது, சத்யா, தனலட்சுமி, பத்மபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 147 of 3988