Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அவிநாசியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Print PDF

தினமணி          26.01.2014 

அவிநாசியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

அவிநாசி பேரூராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 32 நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

  இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அவிநாசி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

  இதில் பிடிக்கப்பட்ட 32 நாய்கள், அவிநாசி உரப் பூங்கா வளாகத்தில், புதிதாக அமைப்பட்டுள்ள விலங்குகள் பிறப்பு கட்டுப்படுத்தும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அந் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, அவிநாசியில் விரைவில் சிறப்பு முகாம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ளோர் தங்களது வீட்டு நாய்களை கொண்டு வந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

அன்னூரில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கல்

Print PDF

தினமணி          26.01.2014 

அன்னூரில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கல்

அன்னூரில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டையை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி வழங்கினார்.

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை அன்னூர் தாசில்தார் சம்பத் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் ராணி, ஒன்றியத் தலைவர் கண்ணம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி

Print PDF

தினமணி          26.01.2014 

வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி

கடலூர் நகரில் வரி நிலுவையை வசூலிக்க புதிய முயற்சி தொடங்கப்படவுள்ளது. இதன்படி அதிக வரி நிலுவை உள்ளவர்களை நேரில் அழைத்துப் பேச முடிவு செய்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

 கடலூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் சொத்து வரி நிலுவை ரூ.7.5 கோடி. இந்த தொகையை வசூலிப்பது தொடர்பாக நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

 இக் கூட்டத்தில் பொறியாளர் ரவி, நகர்நல அதிகாரி குமரகுரு, நகரமைப்பு அதிகாரி முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் பேசியதாவது: சொத்து, குடிநீர் வரி நிலுவையை விரைவாக வசூலிக்க வேண்டும் என்றும் நகராட்சி அனுமதி பெறாமல் முறைகேடாக போடப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க குழு அமைக்கப்படும்.

 தற்போது சொத்து வரி பாக்கி ரூ.5.39 கோடி, குடிநீர் கட்டணப் பாக்கி ரூ.2.17 கோடியாக உள்ளது. வசதி படைத்தவர்கள்தான் அதிக பாக்கி வைத்துள்ளனர்.

எனவே அவர்கள் சொத்து வரி பாக்கியை விரைவில் செலுத்தினால் துப்புரவுப் பணி உள்ளிட்டவைகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும். இதற்காக ஒவ்வொரு வார்டிலும் அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களில் 5 முதல் 10 பேரை அழைத்துப் பேச இருக்கிறேன்.

 கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் நகராட்சியின் அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்புகளை எடுத்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 எனவே அத்தகைய குடிநீர் இணைப்புகளை  துண்டிக்க பொறியாளர் தலைமையில் ஒரு குழுவை நியமிக்க உள்ளோம். அந்த குழுவினர் வார்டு, வாரியாகச் சென்று முறையற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டு பிடித்து துண்டிப்பார்கள் என சி.கே.சுப்பிரமணியன் கூறினார்.

 


Page 150 of 3988