Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர ரூ.94 கோடி செலவில் புதிய கால்வாய்: ஜெயலலிதா ஒப்புதல்

Print PDF

 மாலை மலர்            25.01.2014

பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர ரூ.94 கோடி செலவில் புதிய கால்வாய்: ஜெயலலிதா ஒப்புதல்

சென்னை, ஜன. 25 - தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆரணி நகராட்சியில் 36 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரியகுளம் நகராட்சியில் 15 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவத்திபுரம் நகராட்சியில் 13 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டிவனம் நகராட்சியில் 52 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 117 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 நகராட்சிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ்செயல்படுத்திட முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்து உத்தரவிட் டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தவும், வருடத்திற்கு 11 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அதன் பராமரிப்பை மேற்கொள்ளவும் நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகி றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம் கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளான கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகையை இணைத்து 330 கோடி ரூபாய் செலவில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.

பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு செல்ல கால்வாய் வசதிகள் இருப்பதாலும் மற்றும் இவ்விரண்டு ஏரிகளிலிருந்து கீழ்ப்பாக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு வசதிகள் இருப்பதாலும், தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு கண்டலேறு பூண்டிக் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை 93 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தினால் செயல் படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் படிப்படியாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான அரசு முடிவெடுத்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சியில் 26 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சாத்தூர் நகராட்சியில் 37 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மேட்டூர் நகராட்சியில் 73 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அரக்கோணம் நகராட்சியில் 95 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் நகராட்சியில் 104 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 412 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கூறிய 6 நகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார்.

குடிநீர் அபிவிருத்தி திட்டங்களுக்காக 441 கோடியே 46 லட்சம் ரூபாய், பாதாளச் சாக்கடைத் திட்டங் களுக்காக 412 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 853 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டங்களை செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

ஆழ்குழாய் கிணற்று பள்ளம் மூடல் தேவகோட்டை நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்             25.01.2014

ஆழ்குழாய் கிணற்று பள்ளம் மூடல் தேவகோட்டை நகராட்சி நடவடிக்கை

தேவகோட்டை. : தேவகோட்டை ராம்நகரில் உள்ள அழகப்பா பூங்காவின் மேற்கு தெருவில் நகராட்சி குடிநீர் சப்ளைக்கான போர்வெல் கிணறு உள்ளது.

இதனை பழுது பார்த்து சென்றவர்கள் அந்த குழியை மூடாமல் சென்று விட்டனர். ஆபத்தை அறியா குழந்தைகள் அந்த குழியில் தவறி விழ நேரிடும் என்பதால் அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்த செய்தி 22ம் தேதியன்று தினகரனில் வெளியானது. அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆழ்குழாய் பகுதியில் இருந்த பள்ளத்தை முற்றிலுமாக மூடி சரி செய்ததால் பேராபத்து தடுக்கப்பட்டது.

 

ரூ.60.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்

Print PDF

தினகரன்             25.01.2014

ரூ.60.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்

பரமக்குடி, : பரமக்குடியில் ரூ.60.50 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்.

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை, முத்தாலம்மன் படித்துறை, கோகுலர் தெரு, மஞ்சள்பட்டினம் பகுதியில் தலா ரூ.10 லட்சம், வைகை நகரில் ரூ.14.50 லட்சம், எமனேஸ்வரத்தில் ரூ. 6 லட்சம் என மொத்தம் ரூ.60.50 லட்சத்திலும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்  கட்டப்பட்டன.

இதற்கான திறப்பு விழா நடந்தது. நகர்மன்ற தலைவர் கீர்த்திகா தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் எம்ஏஎம் முனியசாமி, நகர்மன்ற துணை தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் தங்கப்பாண்டி வரவேற்றார்.

கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்து பேசுகையில், சட்டமன்ற நிதி தொகுதி முழுவதும் பிரித்து முறை யாக வழங்கப்பட்டு வருகி றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பட்டப்படிப்பில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடந்த ஒரே ஆண்டில் 3 கல்லூரிகளை தமிழக அரசு வழங்கியது. தற்போது கல்லூரியில் வகுப்பறை கட்ட ரூ.4.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களும் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட உள்ளன.

காட்டுபரமக்குடி முதல் காக்காதோப்பு வரை வைகை ஆற்றின் கரையோரத்தில் ரூ.6.73 கோடியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட உள்ளது என்றார்.

ஒன்றிய செயலாளர் முத்தையா, இலக்கிய அணி செயலாளர் திலகர், அண்ணா தொழிற்சங்க பொருளாளர் நாகராஜன், ஆவின் துணை தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.

 


Page 151 of 3988