Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மதுரை மாநகரில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Print PDF

தினமணி             25.01.2014

மதுரை மாநகரில் குடிநீர் பிரச்னையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மதுரை மாநகரில் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாமல் சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

மதுரை மாநகரில் கோடைகாலத்தில் சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து மேயர் ராஜன்செல்லப்பா பேசியது:

பருவமழை பொய்த்த காரணத்தால், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் கோடைகாலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி கிணறுகள் மூலமாக குடிநீர் பெறப்பட்டு, தனியார் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும்.

விரிவாக்கப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், மாநகராட்சி வார்டு பகுதிகளில் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி பொறியாளர்கள் இப்போதிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.

  மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளிலுள்ள குடிநீர் ஆதாரங்களை கண்டறிந்து குடிநீர் தொடர்ந்து சீராக விநியோகம் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

கூட்டத்தில், நகரப் பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், திருஞானம், அரசு, ராஜேந்திரன், பிஆர்ஓ சித்திரவேல் மற்றும் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம்

Print PDF

தினமணி             25.01.2014

ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம்

ரூ. 9.9 கோடியில் திரு.வி.க. நகர் ஸ்டீபன்சன் சாலையில் புதிய பாலம் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மான விவரம்: திரு.வி.க. மண்டலம் 73-வது வார்டு ஸ்டீபன்சன் சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டப்படும். இதற்கு ரூ. 9.9 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான நிதி மாநகராட்சி ஆணையரின் நிர்வாக அனுமதி பெறப்பட்ட பின்னர் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்தப் பணி, பாலங்கள் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும்.

 

ரிப்பன் கட்டட புனரமைப்புக்கு மேலும் ரூ. 7.35 கோடி

Print PDF

தினமணி             25.01.2014

ரிப்பன் கட்டட புனரமைப்புக்கு மேலும் ரூ. 7.35 கோடி

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மேலும் ரூ. 7.35 கோடி செலவிட மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நோக்குடன், கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்படாத காரணத்தினால், இதுவரை கட்டடத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவில்லை. பணிகள் முடிவடைய பல மாதங்களாகும் நிலை உள்ளது. இந்த நிலையில் கட்டட புனரமைப்புப் பணிகளுக்கு கூடுதலாக ரூ. 7.35 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான தீர்மானம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பணிகள் விரைந்து முடிக்கப்படும்: இந்த தீர்மானத்தின் மீது பேசிய 117-வது வார்டு உறுப்பினர் சின்னய்யன், இப்போது கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. பணிகள் முடிக்கப்படும் தேதி குறித்து இதில் குறிப்பிடப்படவில்லை. புனரமைப்புப் பணிகள் எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மேயர் சைதை துரைசாமி, கடுக்காய், வெண் முட்டைக் கரு ஆகியவை கலந்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதே முறையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் ஈடுபட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும், பணி செய்யும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் பணியை பிரித்து வழங்கியும், கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டும் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

 


Page 159 of 3988