Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மெரீனா சாலையை அழகுபடுத்த ரூ.33 கோடி

Print PDF
தினமணி             25.01.2014

மெரீனா சாலையை அழகுபடுத்த ரூ.33 கோடி


ரூ. 33.10 கோடி செலவில் மெரீனா கடற்கரை சாலையை அழகுப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: மெரீனா காமராஜர் சாலையின் மேற்குப் பகுதியில் அகில இந்திய வானொலி நிலையம் முதல் சிவானந்தா சாலை வரையில் உள்ள சாலையோர பழைய சுற்றுச்சுவர்களை அகற்றி வரலாற்று நினைவுத் தூண்கள், வாயிற் கதவுகள் கொண்டு புதுப்பிக்கப்படும்.

மேலும், கிராணைட் கற்கள் மற்றும் கிரானைட் தூண், துருப்பிடிக்காத ஸ்டீல் கைப்பிடியுடன் பாதசாரிகள் நடைபாதை அமைக்கப்படும்.

இதற்கு மொத்தம் ரூ.33.10 கோடி ஆகும். இந்த பணிக்கான ஒப்பந்தம் கோருவதற்கும் அனுமதியளித்து 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

பல்லாவரம், பம்மல் நகராட்சிகளில் ரூ.143 கோடியில் குடிநீர் திட்ட தொடக்க விழா

Print PDF

தினமணி            24.01.2014   

பல்லாவரம், பம்மல் நகராட்சிகளில் ரூ.143 கோடியில் குடிநீர் திட்ட தொடக்க விழா

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

சென்னையை அடுத்த பல்லாவரம்,பம்மல் நகராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.143 கோடி செலவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத் தொடக்க விழா பல்லாவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் கீழ்கட்டளையில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியது: பல்லாவரம் நகராட்சியின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் இத்திட்டத்தின் மூலம் தினமும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2.90 கோடி லிட்டர் குடிநீர் பெற்று,விநியோகம் செய்யும் வகையில் ரூ.99.50 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட அனைத்து பழைய குடிநீர்க் குழாய்களையும் அப்புறப்படுத்தி விட்டு,210கி.மீ நீளத்திற்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் 135 லிட்டர் குடிநீர் பெற முடியும் என்றார்.

பின்னர் பம்மல் நகராட்சி சங்கர் நகரில் ரூ.43.10 கோடி செலவில் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறும் திட்டத்துக்காகக் கட்டவிருக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கான பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,பல்லாவரம் எம்.எல்.ஏ. பி.தன்சிங்,நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே,குடிநீர் வடிகால் வாரியம் மேலாண் இயக்குநர் சந்திரமோகன், தாமஸ்மலை ஒன்றியத் தலைவர் என்.சி.கிருஷ்ணன்,பல்லாவரம்,பம்மல் நகர்மன்றத் தலைவர்கள் நிசார் அகமது,இளங்கோவன்,துணை தலைவர்கள் டி.ஜெயபிரகாஷ்,அப்பு வெங்கடேசன்,ஆணையர்கள் ராமமூர்த்தி,ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

சென்னையை அடுத்த பல்லாவரம்,பம்மல் நகராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.143 கோடி செலவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத் தொடக்க விழா பல்லாவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் கீழ்கட்டளையில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியது: பல்லாவரம் நகராட்சியின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் இத்திட்டத்தின் மூலம் தினமும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2.90 கோடி லிட்டர் குடிநீர் பெற்று,விநியோகம் செய்யும் வகையில் ரூ.99.50 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட அனைத்து பழைய குடிநீர்க் குழாய்களையும் அப்புறப்படுத்தி விட்டு,210கி.மீ நீளத்திற்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் 135 லிட்டர் குடிநீர் பெற முடியும் என்றார்.

பின்னர் பம்மல் நகராட்சி சங்கர் நகரில் ரூ.43.10 கோடி செலவில் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறும் திட்டத்துக்காகக் கட்டவிருக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கான பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,பல்லாவரம் எம்.எல்.ஏ. பி.தன்சிங்,நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, குடிநீர் வடிகால் வாரியம் மேலாண் இயக்குநர் சந்திரமோகன், தாமஸ்மலை ஒன்றியத் தலைவர் என்.சி.கிருஷ்ணன், பல்லாவரம்,பம்மல் நகர்மன்றத் தலைவர்கள் நிசார் அகமது, இளங்கோவன், துணை தலைவர்கள் டி.ஜெயபிரகாஷ்,அப்பு வெங்கடேசன்,ஆணையர்கள் ராமமூர்த்தி,ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரி விதிக்க மாநகராட்சி குழு நடவடிக்கை

Print PDF

தினமணி            24.01.2014   

திருமண மண்டபம், தயா பார்க்கிற்கு முறையான வரி விதிக்க மாநகராட்சி குழு நடவடிக்கை

மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் திருமண மண்டபம் மற்றும் மாட்டுத்தாவணி அருகிலுள்ள தயா வலைத்தள பூங்காவுக்கு முறையான வரிவிதிப்பு செய்ய மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்தினருக்குச் சொந்தமான திருமண மண்டபம் மதுரை டிவிஎஸ் நகர் பகுதியிலும், தயா வலைத்தள பூங்கா மாட்டுத்தாவணி பகுதியிலும் அமைந்துள்ளன.

 இந்த இரண்டுக்கும் மிகக்குறைவான வரிவிதிப்பு செய்திருப்பதுடன், இதற்காக அந்தப்பகுதி முழுவதுமே வரி குறைப்பு செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து, சமீபத்தில் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நியாயமான வரியை வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுக் கூட்டம் தலைவர் எஸ்டி ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆணையர்(கணக்கு) ஜோசப், மண்டல நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்குமார், ரங்கராஜன், பழனிவேல், உதவி வருவாய் ஆய்வாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர்கள் அலெக்சாண்டர், பாலமுருகன், காமராஜ், சேகர், நிதி ஆலோசகர் ஜெயபால், மாமன்ற உறுப்பினர்கள் ராஜா சீனிவாசன், திரவியம், குமார், இந்திராணி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வார்டு 92 சத்தியசாய் நகர் பகுதியில் (தயா திருமண மண்டபம் உள்ளிட்ட) வரிவிதிப்பு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் முறையாக ஏ பிரிவு வரிவிதித்து மாநகராட்சிக்கான வருவாயை மீட்க தீர்மானிக்கப்பட்டது.

 மாட்டுத்தாவணி-புதூர் 100 அடி சாலைப்பகுதி (தயா பார்க் உள்ளிட்ட) வணிகக் கட்டடங்களுக்கு மிகக்குறைவான டி பிரிவில் சேர்த்து வரிவிதிப்பு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தப்பகுதியை ஏ பிரிவு வரிவிதிப்பு செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்தத் தீர்மானங்கள் மாமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் மேற்கண்ட பகுதிகளில் முறையான வரிவிதிப்புக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 


Page 160 of 3988