Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பஸ் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி            24.01.2014   

பஸ் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் திடீர் ஆய்வு

திண்டுக்கல் பஸ் நிலையத்தில், நகர்மன்றத் தலைவர் வி. மருதராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள், நடைமேடை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

 பஸ் நிலைய வளாகத்தில் உடைந்து காணப்படும் கழிப்பறைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், நடைபாதையை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறாக கடை அமைப்பவர்களைக் கண்காணிக்க குறுகிய இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.   பஸ் நிலையம் முழுவதையும் புதுப்பிக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயார் செய்தவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார். நகர்மன்றத் தலைவர் ஆய்வுக்கு வருவதாகக் கூறிய அதிகாரிகள், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சில வியாபாரிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Print PDF

தினமணி            24.01.2014 

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

போடி நகராட்சியில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  போடி வட்டாட்சியர் அலுவலகத் தேர்தல் பிரிவு, போடி நகராட்சி ஆகியவை இணைந்து, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சிவ. ஜானகி தலைமை வகித்து, பேரணியை தொடங்கிவைத்தார்.

  போடி வட்டாட்சியர் வீ. பழனிக்குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பொறியாளர் ஆர். திருமலைவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், போடி நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் வாக்காளர்களாக சேருவதன் அவசியம் பற்றியும், வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்களிப்பதன் மூலம் ஆற்றும் ஜனநாயகக் கடமைகள், வாக்காளர் அடையாள அட்டையின் பயன்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர்.

  பேரணியானது, போடி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, தேவர் சிலையில் நிறைவடைந்தது. இதில், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அசோகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

 

பரமக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி            24.01.2014 

பரமக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ 60.5 லட்சத்தில் 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் புதன்கிழமை திறந்து வைத்தார்.

 பரமக்குடி நகர்பகுதியில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடிநீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்திட ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வாரச்சந்தை பகுதியில் ரூ.10 லட்சத்திலும், முத்தாலம்மன் கோயில் படித்துறை பகுதியில் ரூ.10 லட்சத்திலும், கோகுலர் தெருவில் ரூ.10 லட்சத்திலும், மஞ்சள்பட்டினம் மேற்கு பகுதியில் ரூ. 10 லட்சத்திலும், வைகை நகர் பகுதியில் ரூ.14.50 லட்சத்திலும், எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் ரூ.6 லட்சத்திலும் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டன.

 இவ்விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான எம்.ஏ.முனியசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் ஜி.தங்கப்பாண்டியன் வரவேற்றார்.

 அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை திறந்து வைத்துப் பேசியதாவது: பரமக்குடி நகராட்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 6 இடங்களில் ரூ. 60.5 லட்சத்தில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 5 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் விரிவாக்கப் பணிக்காக ரூ. 2.50 கோடி ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டுள்ளது என அவர் பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள்  பலர் கலந்துகொண்டனர்.

 


Page 161 of 3988