தினமணி 24.01.2014
ஊஞ்சலூரில் சாலைப் பணிகள் ஆய்வு
கொடுமுடி ஒன்றியம், ஊஞ்சலூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலைப் பணிகளை, ஈரோடு பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சு.கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார்.
ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தம்முதல், பேரூராட்சி அலுவலகம் வரை கான்கிரீட் சாலையாக மாற்ற ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊஞ்சலூர் பேரூராட்சித் தலைவர் ராஜலட்சுமி சாமிநாதன், செயல் அலுவலர் என்.நாகராஜன் உடனிருந்தனர்.