Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வாக்காளர் தின பேரணி

Print PDF

தினகரன்            24.01.2014 

வாக்காளர் தின பேரணி

போடி, : போடி நகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதில் நகராட்சி பள்ளியைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியை உத்தமபாளையம் ஆர்டிஓ ஜானகி தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பஸ்ஸ்டாண்டை அடைந்தது.

பேரணியில் தாசில்தார் பழனிகுமார், நகராட்சி ஆணையாளர் சசிகலா, பொறியாளர்கள் குணா, திருமலைவாசன், கருப்பணன் மற்றும் முத்தையா, ஆண்டவர், செந்தில், பாலமுருகன், வனராஜ், கற்பகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்            24.01.2014  

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலி பேரணி நேற்று நடந்தது. பேரணியை, மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல் தொடங்கி வைத்தார். இப்பேரணி மாநகராட்சிப் பூங்கா வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் ஆர்.டி.ஓ.பழனிக்குமார், தெற்கு தாசில்தார் பூபதி, உதவி கமிஷனர் செல்வநாயகம், தேர்தல் துணை தாசில்தார்கள் சுப்பிரமணியம், விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

Print PDF

தினகரன்            24.01.2014

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி 4வது மண்டல பகுதியில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு சேவை நிதி கழகத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணியால் மோசமான நிலையில் உள்ள ரோடுகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 46வது வார்டு பகுதியில் சரவணபவ நகர் பகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிபாளையம் முதல் வீதி, நல்லத்தம்பி நகர் ஆகிய பகுதிகளில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவள்ளுவர் நகர், நிட்இந்தியா ரோடு ஆகிய பகுதிகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட் டிலும் சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படவுள்ள.

 47வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி லும், பாரதிநகர் முதல்வீதி, 2வது வீதியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிநகர் 3வது வீதி, 7வது வீதி ஆகிய பகுதிகளில் 34 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

4வது மண்டல பகுதியில் உள்ள இருவார்டுகளிலும் 2.28 கோடி ரூபாய் மதிப் பீட்டில் தார்சாலைகள், மழைநீர்வடிகால் அமைத் தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி பாரதிபாளையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பணியைத் தொடங்கி வைத்தார். துணை மேயர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர்கள் காஞ்சனா பழனிச்சாமி, மனோகரன், ஆணையாளர் விஜயலட்சுமி, பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணை யர் விஜயகுமார், கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி, எம்.கே.ராஜா, கவிதாரமேஷ், சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 164 of 3988