Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டி

Print PDF

தினகரன்            24.01.2014

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டி

துவரங்குறிச்சி, : பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

துவரங்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், பொன்னம்பட்டி பேரூ. தலைவர் அப்துல்மாலிக் தலைமையில், துணைத் தலைவர் மதியழகன் முன்னிலையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், செஸ் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், திருக்குறள் புத்தகம் மற்றும் பாடப் புத்தகங்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பொன்னம்பட்டி பேரூ. செயல் அலுவலர் சோமசுந்தரம், பேரூ. வார்டு உறுப்பினர்கள் பிச்சையம்மாள், பாலகிருஷ்ணன், வீரைய்யா, சர்புனிசாபீவி, ராமசாமி, பீர்சுல்தான், அப்துல்காலிக், அப்துல்மாலிக், ஜரினாபேகம், பூங்கோதை, பழனியம்மாள், பாலு, வல்லான், ரேவதி மற்றும் பேரூ. பணியாளர் அழகேந்திரன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொட்டியம்: தொட்டியம் பேரூராட்சி சார்பில் வாக்காளர் தினவிழாவை விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தொட்டியம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

தொட்டியம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஐயப்பன், செயல் அலுவலர் சித்ரா, கவுன்சிலர்கள் கவியரசன், சீனிவாசன், ரமேஷ், ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டுகளில் நடந்த விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் ஐயப்பன் ஆகியோர் பரிசு வழங்கினர். அலுவலக பணியாளர் சம்பத் நன்றி கூறினார்.

 

183வது வார்டில் 5,000 பேருக்கு இலவச மிக்சி

Print PDF

தினகரன்            24.01.2014

183வது வார்டில் 5,000 பேருக்கு இலவச மிக்சி


வேளச்சேரி, :  மாநகராட்சி 183வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இலவச மிக்சி வழங்கும் நிகழ்ச்சி கொட்டிவாக்கம் ஒம்எம்சிஏ பள்ளியில் நடந்தது. மண்டல குழு தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் சின்னையா கலந்துகொண்டு 5000 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கினார். சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்பி, கே.பி.கந்தன் எம்எல்ஏ, பரங்கிமலை ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் முனுசாமி, மண்டல குழு தலைவர் லியோ சுந்தரம், ஒன்றிய அதிமுக செய லாளர் டி.வி.நாராயணன், கொட்டிவாக்கம் கிளை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ.10 கோடி நிதி

Print PDF

தினபூமி             24.01.2014

நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ.10 கோடி நிதி

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/New-CM_Jaya5(C)_1.jpg 

சென்னை,_ஜன.24 - 73 பேரூராட்சிகளில் 10 கோடி ரூபாய் செலவில 77 ஒருங்கிணைந்த நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:_

மனிதக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் தீர்வு செய்வது பொது சுகாதாரத்தின் மிக முக்கிய கூறாகும்.  பாதாளச் சாக் கடைத் திட்டத்தில் இணைக்கப் பட்டுள்ள கழிப்பறைகள் தேவையான எண்ணிக்கை இல்லாததாலும், போதுமான மற்றும் நல்ல முறையில் பராமரிக்கப்படும்  சுகாதார மான பொதுக் கழிப்பிடங்கள் இல்லாததாலும், திறந்த வெளி கழிப்பிடங்கள் நீண்டகாலமாக தொடர்வது பொது சுகாதாரத்திற்கு மிகுந்த சவாலாக உள்ளது.

எனவே 2015 ஆம் ஆண்டிற் குள் தமிழ்நாட்டை திறந்த வெளியில் மனிதக்கழிவு கழித்தல் இல்லாத மாநில மாக உருவாக்க முதல்_அமைச்சர்  ஜெயலலிதாவின்  தலைமை யிலான அரசு உறுதி பூண்டு உள்ளது.  அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் திறந்த வெளியில் மனிதக்கழிவு கழிக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு  புதியதாக கழிப்பிடங்களை ஏற்படுத்தல், பழுதான கழிப்பிடங்களை மேம்படுத்திடல், தகவல், கல்வி மற்றும் விழிப்புணர்வு தீவிர பிரச்சாரத்தின் வாயிலாக திறந்தவெளியில் மனிதக்கழிவு கழிப்பதை தவிர்க்கச் செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை முதல்_அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமை யிலான அரசு எடுத்து வருகிறது.

2015_ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டில் பொது இடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை யின் அடிப்படை யில் புதிய பொதுக் கழிப்பிடங்கள் அமைப்பதற்கும், தற்பொழு துள்ள கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வசதி  மற்றும் மின்சார வசதி ஆகிய பணிகளுக்காக கடந்த 2011__12 ஆம் ஆண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு, முதற்கட்டமாக 19 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது,  இதன் மூலம் 52 பேரூராட்சிகளில் 52 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு, 62 பேரூராட்சிகளில் 75 சுகாதார வளாகங்கள் புனரமைக்கப்பட்டன.  அதேபோல் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 658 கழிவறைகள் புனரமைக்கப்பட்டதுடன்  புதியதாக 253 கழிப்பறைகள் கட்டப்பட்டன.

மேலும் சென்ற ஆண்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பொதுக் கழிப்பிடங்களை மேம்பாடு செய்வதற்காகவும், மற்றும் புதிய பொதுக் கழிப்பிடங்களை கட்டுவதற் கும் 72 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.

மேலும் 2006_ஆம் ஆண்டு முதல் 2011_ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாழடைந்த நிலையில் இருந்த 12,796 மகளிர் சுகாதார வளாகங்கள், முதல்_ அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி 170 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு பெண்களுக்கான அடிப் படை சுகாதாரம் உறுதி செய்யப்பட்டது.

பெண்களுக்கு மட்டு மின்றி, ஆண்களுக்கும் சுகாதார வளாகங்கள் அமைக்கவும் முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டு ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் வீதம் 770 கிராம ஊராட்சிகளில் 35 கோடி செலவில் அமைக்கவும் முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.

மேலும் சுகாதார கிராமங் களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப் படையில் ஒவ்வொரு தனிநபர் இல்லக் கழிப்பறை அமைப்பதற்காக மாநில அரசின் சார்பில் வழங்கும் அலகுத் தொகையினை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தியும், அதன் அடிப்படையில் 2012_13 ஆம் நிதியாண்டில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 901 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு முதல்_அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.

தமிழகத்தில் 2015_ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் திறந்தவெளி மனிதக்கழிவு கழித்தல் அறவே ஒழித்திட வேண்டும் என்ற  நோக்கத் தினை எய்தும் வகையில்,   இந்த ஆண்டு மேலும் 10 கோடி ரூபாய் செலவில் 73 பேரூராட்சிகளில் 77 ஒருங்கிணைந்த நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள் ளார்.  இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Last Updated on Friday, 24 January 2014 10:19
 


Page 165 of 3988