Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு புதிய குடிநீர்த் திட்டம்

Print PDF

தினமணி             23.01.2014 

நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு புதிய குடிநீர்த் திட்டம்

 நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதி மக்களுக்காக ரூ.161.15 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இதற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாநில அளவிலான தொழில்நுட்பக் குழு கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

நாமக்கல் நகராட்சி அருகேயுள்ள கொண்டிச்செட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியபட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக நகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. தற்போது 39 வார்டுகளுடன் நகராட்சி செயல்படுகிறது.

ஏற்கெனவே இருந்த 30 வார்டு பகுதிகளில் மட்டும் தினமும் நபருக்கு 135 லிட்டர் காவிரிக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதி மக்களுக்கு தினமும் ஒரு நபருக்கு 45 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்பட்டு வரும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதிகளுக்காக மட்டும் ரூ.161.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஜேடர்பாளையம் - நாமக்கல் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த நாமக்கல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாநில அளவிலான தொழில்நுட்பக் குழு கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருப்பதாக ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:

புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, நாமக்கல் நகராட்சிக்கு தினமும் கூடுதலாக 309 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வர முடியும். இதன்மூலம் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதியில் தினசரி நபருக்கு 135 லிட்டர் காவிரி குடிநீர் வழங்கப்படும்.

இந்த குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வரை இடைப்பட்ட வறட்சிக் காலத்தில் சீரானக் குடிநீர் விநியோகம் செய்ய மோகனூர் நீரேற்று நிலையம், அணியாபுரம் நீருந்து நிலையம் ஆகியவற்றில் ரூ.1.78 கோடியில் புதிய மோட்டார்கள் அமைக்கவும், இதுவரை பெறப்படும் குடிநீரைத் தேக்குவதற்கு ரூ.50 லட்சம் செலவில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத் தள தொட்டிகள் 5 இடங்களில் அமைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யவும், பெறப்படும் குடிநீர் அளவுகளைக் கண்காணிக்க நாமக்கல் நகராட்சி வளாகத்திலுள்ள பிரதானக் குடிநீர் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பில் கருவி பொருத்தப்படும் என மொத்தம் ரூ.3.03 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் அவர்.

நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

நகர்ப்புறங்களில் கழிப்பறை கட்டவும்சிறுகடன் வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி             23.01.2014 

நகர்ப்புறங்களில் கழிப்பறை கட்டவும்சிறுகடன் வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

நகர்ப்புற மக்களும் எளிதில் கழிப்பறை கட்டுவதற்காக சிறுகடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி.

  திருச்சியில் புதன்கிழமை கிராமாலயா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் சுகாதாரத் திட்ட சிறுகடன் உதவி குறித்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது:

  கழிப்பறை பயன்படுத்துவதில் இன்னமும் கிராமப்புற மக்கள் விழிப்புணர்வு அடையவில்லை. கூடுதலாக இதற்காக பணியாற்ற வேண்டியுள்ளது.

  நகர்ப்புறத்திலும் கழிப்பறை பயன்பாடு பெரும் சவாலாகவே இருக்கிறது. எனவே, நகர்ப்புற ஏழை மக்களும் எளிதில் கழிப்பறை பயன்படுத்தும் வகையில், சிறுகடன் உதவிகளை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் தண்டபாணி.

  கருத்தரங்குக்கு வாட்டர் டாட் ஆர்க் அமைப்பின் தெற்கு ஆசிய முதுநிலை மேலாளர் ரேச்சல் புரம்பாஹ் தலைமை வகித்தார். கிராமாலயா நிறுவனர் எஸ். தாமோதரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

  முழு சுகாதார இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என 75 பேர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.

 கருத்தரங்கு வியாழக்கிழமை பிற்பகலில் நிறைவடைகிறது. வெள்ளிக்கிழமை கிராமப்பகுதிகளில் கடன் பெற்று கழிப்பறை கட்டியவர்களை நேரில் சென்று சந்திக்கின்றனர்.

 

நவீன வடிவில் மழை நீர் சேமிப்பு தொட்டி

Print PDF

தினகரன்             23.01.2014 

நவீன வடிவில் மழை நீர் சேமிப்பு தொட்டி

மதுரை, : மதுரை மாநகராட்சி சார்பில் கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகிலுள்ள தெருவில் ரூ. 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பதிக்கப் பட்டுள்ளது.

இங்கிருந்து மழை நீர் சேரும் வகையில் நவீன வடிவில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப் பட்டுள்ளது. இதனை மேயர் ராஜன்செல்லப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் நகர பொறியாளர் மதுரம் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

 


Page 169 of 3988