Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அனுமதி பெறாத கழிவு நீர் வாகனங்களுக்கு மாநகராட்சி கடும் எச்சரிக்கை மீறினால் ஏலம் விடப்படும்

Print PDF

தினகரன்             23.01.2014 

அனுமதி பெறாத கழிவு நீர் வாகனங்களுக்கு மாநகராட்சி கடும் எச்சரிக்கை மீறினால் ஏலம் விடப்படும்

திருச்சி, : அனுமதி இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு ரூ.5000அப ராதம் விதிப்பதோடு, தொடர்ந்து 3 முறை இயங் கும் வாகனங்களை பறி முதல் செய்து ஏலம் விடப் படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்களுடன் அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட் டம் நேற்று நடந்தது. இதுகுறித்து ஆணையர் தண்ட பாணி கூறியதாவது:

திருச்சி மாநகராட்சியில் 35 சதவீதம் பகுதியில் மட் டுமே புதை வடிகால் திட் டம் செயல்படுத்தப்பட்டுள் ளது. 65 சதவீதம் பகுதிக ளில் நச்சு தொட்டிகள் மூலம் கழிவுநீர் சேகரிக்கப் பட்டு மாநகராட்சி மற் றும் தனியார் வாகனங்கள் மூலம் கழிவுநீர் அகற்றப் பட்டு வருகிறது.

தனியார் கழிவுநீர் வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீர் முறையாக மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு பண்ணையில் விடா மல் மாநகரம் மற்றும் மாநகரத்துக்கு வெளியில் உள்ள பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் விடுவதால் நிலத்தடிநீர் மாசுபடுதலும், சுற் றுச்சூழல் பாதிப்பையும் ஏற் படுத்தி வருகிறது. இவ்வகை தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் இயக்கம் முறைப்படுத்தப்படவுள் ளது.

மாநகராட்சி உரிமம் பெற்ற தனியார் கழிவுநீர் வாகனங்களை மட்டுமே மாநகர எல்லைக்குள் மாநகராட்சியின் நிபந்தனைகளுக்குட்பட்டு இயங்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், இவ் வகை வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 உரிம கட்டணம் வசூலிக்கவும், ஒவ்வொரு நடைக்கும் பஞ்சப்பூர் கழிவுநீர் பண் ணையில் விடுவதற்கு ரூ.30வசூலித்துக் கொள்ள வும், அனுமதி இல்லாமல் இயங்கும் வாகனங் களுக்கு முதல்முறை ரூ.5,000 அப ராதம் விதிக்கவும் தொட ர்ந்து 3 முறை அனுமதி இல் லாமல் இயங்கும் வாகனங் களை பறிமுதல் செய்து ஏலம் விடுவதற்கும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில், நகர்நல அலுவலர் மாரியப்பன், ஸ்கோப் இயக்குனர் சுப்புராமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.செப்டிக் டேங்க்கில் மனிதர்கள் இறங்க தடை நச்சுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் எக்காரணத்தை முன்னிட்டும் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தும் வாகன உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு ஆணையர் தண்டபாணி தெரிவித்தார்.

 

கீழப்பாவூர் பேரூராட்சியில் கைத்தறி தின விழா

Print PDF

தினகரன்             23.01.2014 

கீழப்பாவூர் பேரூராட்சியில் கைத்தறி தின விழா

பாவூர்சத்திரம், : நெல்லை மாவட்ட கலெக் டர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கைத்தறி தின விழா நடந்தது.

அனைத்து அரசு ஊழியர்கள் கதர் வேட்டி, சட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.   கீழப் பாவூர் பேரூராட்சியில் தலைவர் பொன்அறிவழகன் தலைமையில் பணியாளர் கள் கைத்தறி தினவிழா கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலு வலர் விஜயகுமார், துணை தலைவர் தங்கச்சாமி, வட்டார காங். தலைவர் சுப்பிரமணியன், அலுவலக பணியாளர்கள் தனுஷ் கோடி, தர்மராஜ், சிவ னனைந்தபெருமாள், ஜவஹர், ஜஸ்டின் திர வியம், ராமர், முத்துசாமி, முருகன், தங்க ராஜ், சுப்புலட்சுமி, திருமலை வடிவு அம்மாள், துப்புரவு பணியாளர்கள் செல்வன், தியாகராஜன், முருகன், செல்லப்பா, ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

Print PDF

தினகரன்             23.01.2014 

மாநகராட்சி 4வது மண்டலத்தில் ரூ2.28 கோடியில் தார்ச் சாலை

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி 4வது மண்டல பகுதியில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு சேவை நிதி கழகத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணியால் மோசமான நிலையில் உள்ள ரோடுகளை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 46வது வார்டு பகுதியில் சரவணபவ நகர் பகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிபாளையம் முதல் வீதி, நல்லத்தம்பி நகர் ஆகிய பகுதிகளில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவள்ளுவர் நகர், நிட்இந்தியா ரோடு ஆகிய பகுதிகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட் டிலும் சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படவுள்ள.

 47வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டி லும், பாரதிநகர் முதல்வீதி, 2வது வீதியில் 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பாரதிநகர் 3வது வீதி, 7வது வீதி ஆகிய பகுதிகளில் 34 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

4வது மண்டல பகுதியில் உள்ள இருவார்டுகளிலும் 2.28 கோடி ரூபாய் மதிப் பீட்டில் தார்சாலைகள், மழைநீர்வடிகால் அமைத் தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி பாரதிபாளையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கி பணியைத் தொடங்கி வைத்தார். துணை மேயர் பழனிச்சாமி, மண்டலக்குழு தலைவர்கள் காஞ்சனா பழனிச்சாமி, மனோகரன், ஆணையாளர் விஜயலட்சுமி, பொறியாளர் ஆறுமுகம், உதவி ஆணை யர் விஜயகுமார், கவுன்சிலர்கள் ஈஸ்வரமூர்த்தி, எம்.கே.ராஜா, கவிதாரமேஷ், சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 170 of 3988