Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மேற்கு மண்டலத்தில் ரூ.61 லட்சம் செலவில் திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி             22.01.2014

மேற்கு மண்டலத்தில் ரூ.61 லட்சம் செலவில் திட்டப் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.60.50 லட்சம் செலவில் வணிக வளாகக் கடைகள், நவீன கழிப்பறை ஆகியவற்றை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

  மேற்கு மண்டலம் 11-ஆவது வார்டு கே.கே.புதூர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் முதல் பிரசவம் பார்த்துக் கொண்ட தாய் மற்றும் பிறந்த குழந்தைக்கான உடைகள், நாப்கின், கொசுவலை ஆகியவற்றை மேயர் செ.ம.வேலுசாமி  புதன்கிழமை வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தார்.

  மாநகராட்சி மருத்துவமனைகளில்  பிறக்கும்  குழந்தைகளுக்கு  3 தினங்களுக்குள்  பிறப்பு சான்றிதழ்  வழங்கும் திட்டத்தையும் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்து, அந்த குழந்தைக்கு  தங்க மோதிரம்  பரிசு வழங்கினார்.

 மேற்கு மண்டலம் 5, 8 மற்றும் 9-ஆவது வார்டுகளில் ரூ.60.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 5 வணிக வளாகக் கடைகள், நவீன கழிப்பறை ஆகியவற்றைத் திறந்து வைத்து, மழைநீர் வடிகால்  கட்டும் பணியையும் ஆணையாளர் க.லதா முன்னிலையில் மேயர் செ.ம.வேலுசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

  மேற்கு மண்டலம் 9-ஆவது வார்டில் அம்பேத்கார் நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன கழிப்பறையை மேயர் திறந்து வைத்தார். 5-ஆவது வார்டு கவுண்டபாளையம் அசோக் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட 5 வணிக வளாக கடைகளையும்  திறந்து வைத்தார்.

   8-ஆவது வார்டு சிவகாமி நகர் பகுதியில் ரூ.30.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் பாலம் அமைக்கும் பணிகளையும் பூமி பூஜை செய்து மேயர் தொடங்கி வைத்தார்.

 மத்திய மண்டலத்திற்குட்பட்ட 84-ஆவது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.26.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திறந்தவெளி கலையரங்கத்தையும், ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டபட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டடத்தையும், 83-ஆவது வார்டு பெரிய கடைவீதி மாநகராட்சி பள்ளி சத்துணவு மைய கட்டடம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளாச்சி நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதையும் மேயர் செ.ம.வேலுசாமி அவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர்துரை முன்னிலையில் திறந்து வைத்தார்.

 இந்நிகழ்ச்சிகளில் துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் சாவித்திரி, ஆதிநாராயணன், கண்காணிப்புப் பொறியாளர் கணேஷ்வரன், நகர பொறியாளர் சுகுமார், உதவி ஆணையர்கள் சுப்ரமணியன்;, ரவி, கல்வி குழுத் தலைவர் சாந்தாமணி, பணிகள் குழுத்தலைவர் அம்மன் அர்ச்சுணன், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

மாநகரில் நாளை 5 மண்டலத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

Print PDF

தினகரன்             22.01.2014 

மாநகரில் நாளை 5 மண்டலத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

கோவை, : கோவை மாநகராட்சியில் நாளை 5 மண்டலங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

கோவை மாநகராட்சியில் நாளை 5 மண்டலங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் பெயர், கதவு எண், தெருவின் பெயர் மற்றும் கேட்பு முதலிய திருத்தங்கள் மேற்கொள்ளுதல், புதிய சொத்துவரி மற்றும் கேட்பு அட்டை மற்றும் குடிநீர் கேட்பு அட்டை வழங்கல், விடுபட்ட சொத்துவரி, குடிநீர் இணைப்பு பதிவு செய்தல் தொடர்பான இதர பணிகள், தொழில்வரி இனங்கள், புதிய இனங்கள் பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான இதர பணிகளுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

நாளை (22ம் தேதி) கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி காமாட்சியம்மன் கல்யாண மண்டபத்தில் 32வது வார்டு மக்களுக்காகவும், மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் வார்டு அலுவலகத்தில் 5, 6, 7, 8, 9 ஆகிய வார்டு மக்களுக்காகவும் குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் 87, 88, 91, 92, 93 ஆகிய வார்டு மக்களுக்காகவும், வடக்கு மண்டலம் துடியலூர் வார்டு அலுவலகத்தில் 1, 2, 3, 4 ஆகிய வார்டு மக்களுக்காகவும், ஓசூர் சாலையில் உள்ள மத்திய மண்டல அலுவலகத்தில் 25, 72, 73, 74 ஆகிய வார்டு மக்களுக்காகவும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

இதையடுத்து வரும் 27ம் தேதி, பிப்ரவரி முதல் தேதி, 5ம் தேதி, 8ம் தேதி, 10ம் தேதி, 15ம் தேதிகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வார்டுகளுக்கு அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.  இத்தகவலை மேயர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

 

தெருநாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினகரன்             22.01.2014 

தெருநாய்களுக்கு கருத்தடை

சங்ககிரி, : சங்ககிரியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, பேரூராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடித்தனர். சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் வேதமணி முன்னிலையில், சங்ககிரி கால்நடை மருத்துவர் சுரேஷ், பிடிபட்ட நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்தார். இந்த பணியில் சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், எழுத்தர் கணேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குப்பமுத்து, பாலு உட்பட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

 


Page 174 of 3988