Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மயிலாடுதுறை நகராட்சிக்கு குப்பை அள்ளும் டிராக்டர்

Print PDF

தினகரன்             22.01.2014 

மயிலாடுதுறை நகராட்சிக்கு குப்பை அள்ளும் டிராக்டர்

மயிலாடுதுறை, : நாகை மாவட்டம் மயிலாடு றை நகராட்சிக்கு எம்பி நிதியிலிருந்து டிராக்டர் வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடந்தது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக குப்பை அள்ளும் டிராக்டரை மாநிலங்களை எம்பி மணிசங்கர் அய்யர் வழங்கினார். நகர்மன்ற தலைவர் பவானி சீனிவாசன், துணைத்தலைவர் குண்டாமணி செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ ராஜகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

வாகன குடிநீர் கட்டணம் உயர்வு பொதுமக்கள் கருத்து கூறலாம் நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்             22.01.2014 

வாகன குடிநீர் கட்டணம் உயர்வு பொதுமக்கள் கருத்து கூறலாம் நகராட்சி அறிவிப்பு

திண்டுக்கல், : திண்டுக்கலில் வாகன குடிநீர் கட்டணம் உயர்வையடுத்து பொதுமக்கள் கருத்து கூற நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் நகர்மக்களுக்கு ஆத்தூர் காமராஜர்அணை, காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகம் மூலம் அன்றாடம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதிய மழையில்லாத காரணத்தினால் நகர்பகுதியில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள பல ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது.

 இதனால் நகராட்சி குடிநீரையே பொதுமக்கள் நம்பி உள்ளனர். சமையல், குளியல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பகிர்மான குழாய்கள் இல்லாத பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான லாரி மூலம் குடிநீர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருமணம், காதணி, கோயில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்து கொள்ள நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கருவூலத்தில் ரூ.350ஐ செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டால், நகராட்சி லாரி மூலம் ரூ.8ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் டீசல் விலை உயர்வு, வாகனம் பராமரிப்பு செலவு, பணியாளர்கள் ஊதியம் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளது என கூறி கடந்த மாதம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இக்கட்டணத்தை ரூ.ஆயிரமாக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை கூறலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகை யில், கூடுதல் செலவு ஏற்பட்டதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்னமும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. கட்டணம் உயர்வு என பொதுமக்கள் கருதினால் நகராட்சி அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அதன் மூலம் கட்டணம் குறைப்புக்கு வழிவகை செய்யப்படும். என்றார்.

 

தெருநாய்களை பிடிக்க சிறப்பு வாகனம்

Print PDF

தினமலர்              22.01.2014

தெருநாய்களை பிடிக்க சிறப்பு வாகனம்

உடுமலை : உடுமலை நகர தெருக்களில், பொதுமக்களை மிரட்டும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் சார்பில், சிறப்பு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகர குடியிருப்புப்பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்களால், குழந்தைகள் மற்றும் பெண்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகவும் தெரு நாய்கள் காரணமாக இருக்கின்றன என நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் அளிக்கப்பட்டன.

தெருக்களில், சுதந்திரமாக சுற்றித்திரியும் நாய்கள், கால்நடைகளை தாக்கும் சம்பவங்களும் நகரப்பகுதியில் நடந்தன. இவ்வாறு, தெருநாய்கள் குறித்த புகார்கள் அதிகரிக்கும் போது, நகராட்சி நிர்வாகம், தனியார் வாகனம் மூலம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது.

இவ்வாறு, நகரப்பகுதியில், திரிந்த 880 நாய்கள் தனியார் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருப்பினும், தனியார் வாகனத்தை பயன்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், அட்டகாசம் செய்யும் தெருநாய்களை பிடிக்க ரூ.7.80 லட்சம் மதிப்புள்ள "நாய்கள் பயண வாகனம் ' வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்பணிக்காக ஐந்து பேர் கொண்ட பணியாளர் குழுவிற்கு நகராட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனம் வாரம் இருமுறை நகர பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தெரு நாய்களை பிடித்து அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவுள்ளது.

இதனால், தெருநாய்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்; அவை பொது மக்களை துன்புறுத்துவதையும் கட்டுப்படுத்தலாம்; தெருநாய்களை கட்டுப்படுத்த தனி வாகனம் மற்றும் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அச்சுறுத்தும் நாய்கள் பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண முடியும் என நகராட்சி சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.

 


Page 175 of 3988