Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு பூமிபூஜை

Print PDF

தினமணி             21.01.2014 

கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு பூமிபூஜை

கள்ளக்குறிச்சி நகராட்சிப் பேருந்து நிலையத்தில் விரிவாக்கம் செய்தல் பணிக்காக பூமி கட்ட திங்கள்கிழமை அமைச்சர் ப. மோகன் பூமி பூஜை செய்து வைத்தார்.

 கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் போதிய இடவசதியின்மையால் பேருந்துகள் நிறுத்த மிகவும் சிரமம் ஏற்பட்டு வந்தது.   இப்பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக முதல்வர் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் பூமி பூஜை நடைபெறும் விழா பழைய நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கீழ் பகுதியில் சைக்கிள் நிறுத்துமிடமும், 24 கடைகளும் கட்ட உள்ளனர்.

 ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் தலைமை வகித்து பூமி பூஜை செய்து அடிக்கல்லை நாட்டினார். எம்எல்ஏ க.அழகுவேலு பாபு, நகர்மன்றத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் க.வாசுகி,  ஒன்றிய குழுத் தலைவர் அ.ராஜசேகர், நகராட்சி ஆணையர் சு.அருணாச்சலம், நகரச் செயலாளர் எம்.பாபு, நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

 

ராசிபுரத்தில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

Print PDF

தினமணி            20.01.2014

ராசிபுரத்தில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

ராசிபுரம் பாரதிதாசன் சாலை தாய் சேய் நல மையத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

நகரில் அமைக்கப்பட்ட 21 மையங்களில் ஐந்து வயதிற்குள்பட்ட 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மு.கார்த்திகேயன், நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், ரோட்டரி நிர்வாகிகள் நடராஜன், எஸ்.பாலாஜி, மெய்யப்பன், சிவக்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பிரகாஷ், பாஸ்கர், லோகநாதன், அங்குராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

உதகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி            20.01.2014

உதகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

நீலகிரி மாவட்டத்தில் உதகையிலுள்ள நகராட்சி மருந்தகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது, ஆட்சியர் பேசியதாவது:

இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட 47,112 குழந்தைகளுக்கு தற்போது சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 106 துணை சுகாதார நிலையங்கள், 32 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 அரசு மருத்துவமனைகள், 49 தனியார் மருத்துவமனைகள், 283 குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்கள் ஆகியவற்றுடன் ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் 30 நடமாடும் மருத்துவ மையங்களுடன், இதரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 259 முகாம்களுமாக மொத்தம் 770 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் 413 பேருடன், குழந்தைகள் ஊட்டச் சத்து மைய ஊழியர்கள் 665 பேரும், கல்லூரி மாணவர்கள் 272 பேரும், ரோட்டரி சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 55 பேருடன் இதர ஊழியர்கள் 1,687 பேருமாக மொத்தம் 3,080 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுப்பணித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, கல்வித் துறை, வேளாண்மை, மின்வாரியம், குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களின் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது கட்ட போலியோ மருந்து முகாம் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறும் என்றார். மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குநர் டாக்டர் பானுமதி, உதகை நகர்மன்றத் தலைவர் கே.சத்தியபாமா, நகர்மன்ற ஆணையர் சிவகுமார், பர்லியார் ஊராட்சித் தலைவர் எஸ்.கலைச்செல்வன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

 


Page 178 of 3988