Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி            20.01.2014

நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் விஜயலட்சுமி தனபால் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் செல்வா, துணைத் தலைவர் முகமது அப்பாஸ் முன்னிலை வகித்தனர். கூட்ட அறிக்கையை எழுத்தர் அம்பிகா வாசித்தார்.

பிற்பட்ட பகுதி மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பில் வண்ணக் கல் பதித்து சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையம் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் தார்ச் சாலைகள் அமைத்திடவும் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பில் நல்லாகுளம் மேல்கரையில் சுற்றுச் சுவர் மற்றும் நடை பாதை அமைத்தல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் காமராஜ் நகரில் அங்கன்வாடி மையம் அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் செய்திடுவது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார ஆய்வாளர் சடகோபி நன்றி கூறினார்.

 

வைகையில் குப்பைகள் அகற்றும் பணி: சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு

Print PDF

தினமணி            20.01.2014

வைகையில் குப்பைகள் அகற்றும் பணி: சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு

 மதுரை மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட வைகை ஆற்றுப் பகுதியில், ஜனவரி 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 2 நாள்களுக்கு குப்பைகள் அகற்றும் பணி நடைபெறவுள்ளது.

 இப்பணியில், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவ, மாணவியர் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்கலாம் என, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பது:

 மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வைகை ஆற்றில் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றுவதும், குப்பைகளைக் கொட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதனால், வைகை ஆறு மாசுபடும் சூழல் உருவாகியுள்ளது. இதைத் தடுப்பதற்காக, மாநகராட்சி நிரந்தரத் திட்டத்தை வகுத்து, முனைப்புடன் செயலாற்ற உள்ளது.

 இது தொடர்பாக, விரைவில் பல்வேறு துறை அலுவலர்கள், பொறியாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் கருத்துகளை அறிய, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 எனவே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சிக்குள்பட்ட வைகை கரையோரமான விளாங்குடி முதல் தெப்பக்குளம் பாலம் வரை குப்பைகளை அகற்றும் பணிகளை, அழகிய மதுரை மாநகர் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதன்படி, திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு வைகையில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெறும், இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 

ஜெயங்கொண்டத்தில் 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகராட்சி தலைவர் துவக்கிவைத்தார்

Print PDF

தினகரன்              20.01.2014

ஜெயங்கொண்டத்தில் 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகராட்சி தலைவர் துவக்கிவைத்தார்

ஜெயங்கொண்டம், : ஜெயங்கொண்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த 25 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நகராட்சி தலைவர் மீனாள் சந்திரசேகர் நேற்று துவக்கிவைத்தார்.

போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னவளையம், செங்குந்தபுரம், கரடிகுளம், மேலகுடியிருப்பு, கீழக்குடியிருப்பு, வேலாயுதநகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம், நகராட்சி அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, பாத்திமா பெண்கள் பள்ளி உள்ளிட்ட 25  மையங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதையொட்டி, நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் நேற்று காலை 8 மணியளவில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த நகராட்சி தலைவர் மீனாள் சந்திரசேகர், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி இதற்கான விநியோகத்தை முறைப்படி துவக்கிவைத்தார்.

முகாமில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் இந்திரா தலைமையில், டாக்டர் தீபா முன்னிலையில் கிராம சுகாதாரச் செவிலியர் சொட்டு மருந்து வழங்கினர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் நேற்று நடைபெற்ற முகாமில் 2 ஆயிரத்து 815 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை நூற்றுக்கணக்கான செவிலியர்கள் வழங்கினர்.முகாம் ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் செய்திருந்தார்.

 


Page 179 of 3988