தினமணி 20.01.2014
நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம்
நத்தம் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் விஜயலட்சுமி தனபால் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் செல்வா, துணைத் தலைவர் முகமது அப்பாஸ் முன்னிலை வகித்தனர். கூட்ட அறிக்கையை எழுத்தர் அம்பிகா வாசித்தார்.
பிற்பட்ட பகுதி மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பில் வண்ணக் கல் பதித்து சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையம் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது. நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் தார்ச் சாலைகள் அமைத்திடவும் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பில் நல்லாகுளம் மேல்கரையில் சுற்றுச் சுவர் மற்றும் நடை பாதை அமைத்தல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் காமராஜ் நகரில் அங்கன்வாடி மையம் அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் செய்திடுவது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார ஆய்வாளர் சடகோபி நன்றி கூறினார்.