Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குமாரபாளையத்தில் 22 போலியோ சொட்டு மருந்து மையங்கள்

Print PDF

தினமணி            19.01.2014

குமாரபாளையத்தில் 22 போலியோ சொட்டு மருந்து மையங்கள்

குமாரபாளையம் நகராட்சிப் பகுதிகளில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்பட 22 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குமாரபாளையம் ரோட்டரி சங்கம், எஸ்எஸ்எம் கல்வி நிறுவனங்களின் ரோட்ராக்ட் சங்கத்தினர், நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து பேரணியை நடத்தினர். ராஜம் திரையரங்கு அருகே தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்த இந்தப் பேரணியை நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தொடக்கி வைத்தார்.

எஸ்எஸ்எம் கல்வி நிறுவனத் தலைவர் எம்.எஸ்.மதிவாணன், ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.அசோகன், செயலர் பிரகாசன், பொருளாளர் கதிர்வேல், நகராட்சி ஆணையர் என்.சங்கரன், பொறியாளர் ராஜேந்திரன், துப்புரவு அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.

5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ நோய் தடுப்பு மருத்து வழங்குவது குறித்து பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க கரசேவை சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் பங்கேற்பு

Print PDF

தினமலர்              19.01.2014

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க கரசேவை சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் பங்கேற்பு

திருப்பூர் : "தினமலர்' நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி எதிரொலியாக, வள்ளலார் நகர் மற்றும் திருக்குமரன் நகர் பகுதிகளில் பரவிக்கிடந்த பாலிதீன் காகிதங்களை, சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் நேற்று அப்புறப்படுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தினமும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. வள்ளலார் நகர் பாறைக்குழியை சுற்றியுள்ள பகுதிகளில், பாலிதீன் கவர்கள் பரவிக்கிடக்கின்றன.

மாநகராட்சி 52வது வார்டில் பரவிக்கிடக்கும் குப்பையால், மழை பெய்தாலும், நிலத்தடி நீர் சேகரமாவது தடுக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பாலிதீன் குப்பையை அகற்ற வேண்டும் என, கடந்த 4ம் தேதி, "தினமலர்' நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது.

சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் சேவை கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர்கள் மூலமாக, பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

திருப்பூர் சத்ய சாயி சேவா நிறுவனங்களை சேர்ந்த 80 பேர், இரண்டு குழுக்களாக பிரிந்து, நேற்று, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.

வள்ளலார் நகர் மற்றும் திருக்குமரன் நகர் சுற்றுப்பகுதிகளில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலியிடங்களில் பரவிக்கிடந்த பாலிதீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

காலை 9.00 மணி முதல், மதியம் 1.00 மணி வரை சேகரிக்கப்பட்ட கழிவுகள், மூட்டையாக கட்டப்பட்டு, பிளாஸ்டிக் ரோடு பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.

 

மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

Print PDF

தினத்தந்தி               18.01.2014

மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் தினமும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதையடுத்து, மெரினாவில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் புதிது, புதிதாக உருவானது.

இதனால் மெரினா கடற்கரை முழுவதும் கடைகளாக காட்சியளித்தது. சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையில் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தனர்.

 புதிய கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டதால், மாநகராட்சி அனுமதியோடு கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரின் உதவியோடு மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று அதிரடியாக அகற்றினார்கள்.
 


Page 181 of 3988