Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அன்னூர் பேரூராட்சியில் வரி செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினமணி            16.01.2014

அன்னூர் பேரூராட்சியில்  வரி செலுத்த வேண்டுகோள்

அன்னூர் நகராட்சியில் வரிசெலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அன்னூர் பேரூராட்சித் தலைவர் ராணி, செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • அன்னூர் பேரூராட்சியில் நடப்பாண்டில் அரசு நிதி, சட்டபேரவை உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பொது நிதி உள்ளிட்ட நிதிகளிலிருந்து தற்போது ரூ. 4 கோடி மதிப்பீட்டில் 15 வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட உள்ளதால், மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், வணிக நிறுவனங்களின் உரிமக் கட்டணம் உள்ளிட்டவற்றை ஒருவார காலத்திற்குள் செலுத்த வேண்டும்.
சில பகுதிகளில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை பல ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ளன. அதனால் பல வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரிகளைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதுடன், நகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திருவிதாங்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா

Print PDF

தினமணி            16.01.2014

திருவிதாங்கோடு பேரூராட்சி  அலுவலகத்தில் பொங்கல் விழா

திருவிதாங்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

 விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வி.வி. வினிதா முன்னிலை வகித்தார்.

 அலுவலக வளாகத்தில் பொங்கலிடப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

 இதில், பேரூராட்சி உறுப்பினர்கள் பி.தங்கராஜ், பால்ராஜ், ஜெயா, ராதாகிருஷ்ணன், ஐயப்பன், ராஜேந்திரன், கலா, ஜெயபாரதி ஜெயலட்சுமி, தக்கலை ஒன்றிய பாஜக பொதுச் செயலர் என்.கோபாலகிருஷ்ணன், பேரூர் பாஜக தலைவர் எஸ்.பி. தேவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இறைச்சி விற்பனைக்கு தடை

Print PDF

தினமணி            14.01.2014

இறைச்சி விற்பனைக்கு தடை

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் தினமான ஜனவரி 15-ம் தேதி அன்று இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஆடு, மாடு வதை செய்வதும் அன்றைய தினம் தடை செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 184 of 3988