Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

காரைக்குடியில் ரூ.56 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்க விழா

Print PDF

தினமணி            14.01.2014

காரைக்குடியில் ரூ.56 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்க விழா

காரைக்குடி நகராட்சியின் சார்பில் ரூ. 56.70 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள் துவக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி கல்லுக்கட்டி வடக்கு கணபதி பூங்கா இடத்தில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்காக 2012-2013 ஆம் ஆண்டின் பின்தங்கிய பகுதிகளுக்கான வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பிலும், கல்லுக்கட்டி மேற்கு பகுதியில் நவீனகட்டண கழிப்பிட சுகாதார வளாகம் 2013-2014 ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலும், புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளுக்கு இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை மற்றும் பயணிகள் தங்குமிடம் மேம்படுத்த நகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 9.70 லட்சம் மதிப்பிலும் பணிகள் நிறைவடைந்தன.

இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான துவக்கவிழாவில் காரைக்குடி நகர் மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ துவக்கிவைத்தார். நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) கா. மாரியப்பன் தலைமை வகித்தார். காரைக்குடி நகர்மன்றத் துணைத் தலைவர் சோ. மெய்யப்பன், காரைக்குடி டி.எஸ்.பி. முருகேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் சி. மெய்யர், ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

Print PDF

தினமணி            14.01.2014

நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

ராஜபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி தலைமை வகித்து இங்கு பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஒட்டுநர்கள், மகப்பேறு உதவியாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான புதிய சீருடைகளை வழங்கிப் பேசினார்.

ராஜபாளையம் நகராட்சி ஆணையர் ராமசாமி, பொறியாளர் நடராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, கவுன்சிலர்கள் விழாவில் பங்கேற்றனர்.

 

துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருள்கள்

Print PDF

தினமணி            14.01.2014

துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருள்கள்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்புப் பொருள்களை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் திங்கள்கிழமை வழங்கினார்.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேயர் செ.ம.வேலுசாமி தலைமை வகித்தார். ஆணையர் க.லதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, சேலஞ்சர் துரை, எம்.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சியில் பணியாற்றும் 2,909 துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.7.28 லட்சம் மதிப்பிலான பொங்கல் சிறப்பு பொருள்கள் வழங்கப்பட்டன.

பொங்கல் சிறப்புப் பொருள்களை வழங்கி, வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் பேசியது:

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருள்கள் வழங்குவதுபோல், தமிழகத்தில் முதன் முறையாக மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது என்றார்.

மேயர் செ.ம.வேலுசாமி பேசியது: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 2,909 துப்புரவு பணியாளர்களுக்கும் நடப்பாண்டு முதல் ரூ.7.28 லட்சம் மதிப்பில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய், பாசி பருப்பு, கரும்பு, மஞ்சள் ஆகியவை ரூ.250 மதிப்பில் வழங்கப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிப்பதற்காக ரூ.14.99 லட்சம் மதிப்பில் 2 சிறப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் அதன் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மாநகராட்சியில் பணியாற்றிய பணியாளர்களின் வாரிசுகள் 200 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இது வரை வேலை நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொது பிரிவில் நேரடி நியமனமாக 22 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், கே.ஆர். ஜெயராம், பி.சாவித்திரி, பி.ராஜ்குமார் எம்.பெருமாள்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 185 of 3988