Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா

Print PDF

தினமணி            14.01.2014

குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

பள்ளியில் வண்ண வண்ண கோலமிட்ட மாணவிகள், ஆசிரியைகள் மாவிலைத் தோரணம் கட்டி கதிரவனுக்கு பொங்கல் படையல் இட்டனர்.

நிகழ்ச்சியில், பொங்கல் திருநாளின் சிறப்பு, தமிழர் வரலாறு, பண்பாடுகளை தலைமையாசிரியை சி.கெüசல்யாமணி விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பொங்கலின் சிறப்பை விளக்கும் பாடல், பேச்சு, நடனம், கவிதைப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. கணித ஆசிரியர் வெ.வடிவேல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

 

கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்

Print PDF

தினகரன்              13.01.2014

கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்

இடைப்பாடி, :  இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

இடைப்பாடி வாரச்சந்தை பகுதியில் கொங்கணாபுரத்திற்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ90 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நட்டு விழா மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ2 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி இயக்குனர் வரவேற்றார். அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் செம்மலை எம்பி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவர்கள் கரட்டூர் மணி, மாதேஷ், நகர்மன்ற தலைவர் கதிரேசன், மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாதேஸ்வரன், பேரூராட்சி துணை தலைவர் கந்தசாமி, வசந்தா, ஒன்றியக்குழு துணைதலைவர் சாந்தி செந்தில், நல்லாக்கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம்

Print PDF

தினமணி            13.01.2014

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம்

கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாநில அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் கொங்கணாபுரத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் தலைமை வகித்தார்.

பேருந்து நிலையம் கட்டும் பணியைத் தொடக்கிவைத்து அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட கொங்கணாபுரத்தில் ஏராளமான அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பரமத்திவேலூர் பகுதியில் இருந்து ஓமலூர் வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை கொங்கணாபுரம் வழியாகச் செயல்படுத்தவுள்ளது.

எடப்பாடி அரசுக் கல்லூரிக்கு கட்டங்கள் கட்ட ரூ.7.5 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. எஸ். செம்மலை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கரட்டூர் கே.மணி, எடப்பாடி நகர்மன்றத் தலைவர் கதிரேசன், பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பழனியம்மாள், செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், பேரூராட்சி பகுதியில் குப்பைகளை அகற்ற ரூ.15 லட்சத்தில் புதிய டிப்பர் லாரியை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும்,புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு சுகாதார வளாகங்களையும், புதிய வணிக வளாகத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

 


Page 186 of 3988