Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

Print PDF

தினமணி             13.01.2014

துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

பொங்கல் விழாவை முன்னிட்டு கும்பகோணம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சேலை மற்றும் கைலியை நகர்மன்ற தலைவர் ரத்னாசேகர் தனது சொந்த செலவில் திங்கள்கிழமை வழங்கினார்.

இதேபோல் நகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர் எஸ். கலைச்செல்வன், நகர்மன்றத் துணைத் தலைவர் ராஜாநடராஜன், நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொங்கல் பொருள்கள்....

கும்பகோணம் 37-வது வார்டு பொதுமக்களுக்கு, அந்த வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சார்பில் திங்கள்கிழமை பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.

கும்பகோணம் 37-வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், நகர அதிமுக துணைச்செயலாளருமான கே. ராஜூ தன்னுடைய சொந்த நிதியிலிருந்து  ஆண்டுதோறும் அந்த வார்டைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவசமாக பொங்கல் பொருள்கள் வழங்கி வருகிறார். அதன்படி கும்பகோணத்தில் 10-வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவுக்கு நகர்மன்ற உறுப்பினர் கே. ராஜூ தலைமை வகித்தார்.

நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர் பொங்கல் பொருள்களை வழங்கினார்.

இதில், 603 பேருக்கு 2 கிலோ அரிசி, 1 கிலோ வெல்லம், 2 கரும்புகள் ஆகியவை வழங்கப்பட்டன.

இதில், முன்னாள் நகர அதிமுக செயலாளர்கள் பி.எஸ். சேகர், ஏ. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அரசு ஏ. ஜெயசீலன் செய்திருந்தார்.

 

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி            10.01.2014

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

அக்காமலை செக்டேம் பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

வால்பாறை நகராட்சி மூலமாக சமீபகாலமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பிரேமா புதன்கிழமை, வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டில் உள்ள அக்காமலை தடுப்பணை பகுதிக்கு சென்ற அவர், அங்கு ரூ.42 மதிப்பீட்டில் நடைபெற உள்ள தடுப்பணை தூர்வாருதல் மற்றும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், சோலையார் அணைப் பகுதிக்கு சென்று, அங்கு புதிதாக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி மண்டலப் பொறியாளர் திருமாவளவன், ஆணையாளர் வெங்கடாசலம், நகராட்சித் தலைவர் சத்தியவாணிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பள்ளி வகுப்பறை கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

Print PDF

தினகரன்            10.01.2014

பள்ளி வகுப்பறை கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

அனுப்பர்பாளையம், :திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ரூ.45.75 லட்சம் செலவில் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பங்கேற்று பணிகளைத் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி திட்டத்ததின் கீழ், வார்டு எண் 20,25,26,28, ஆகிய பகுதிகளில் பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், நியாயவிலைக்கடை கட்டுதல், புதிய அங்கண்வாடி மையக்கட்டிடம் கட்டுதல் ஆகியப் பணிகள் ரூ.45.75 லட்சம் செலவில் நடைபெற உள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், மண்டலத்தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், இரண்டாவது மண்டல உதவி ஆணையர் வாசுகுமார், பொறியாளர் கௌரிசங்கர், சுகாதார ஆய்வாளர் இளங்கோ மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் போயம்பாளையம் விஜயகுமார், உமாமகேசுவரி, முத்து, ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 187 of 3988