Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ரூ.3.20 லட்சத்தில் 4 குடிநீர்த் தொட்டிகள்

Print PDF

தினமணி           10.01.2014

ரூ.3.20 லட்சத்தில் 4 குடிநீர்த் தொட்டிகள்

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 4 குடிநீர்த் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டன.

ஆம்பூர் நகரம் 1-வது வார்டு மோட்டுக் கொல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 4 குடிநீர்த் தொட்டிகளை எம்எல்ஏ  அ.அஸ்லம் பாஷா திறந்து வைத்தார்.   நகரமன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், நகரமன்ற உறுப்பினர் அமீன், துப்புரவு அலுவலர் பாஸ்கர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் வி.ஆர்.நசீர் அஹ்மத், நகரச் செயலர் ஹமீத், தமுமுக நகரச் செயலர் தப்ரேஸ் அஹ்மத், நபில் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி           10.01.2014

அக்காமலை செக்டேமில் ரூ.42 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

அக்காமலை செக்டேம் பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

வால்பாறை நகராட்சி மூலமாக சமீபகாலமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் பிரேமா புதன்கிழமை, வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டில் உள்ள அக்காமலை தடுப்பணை பகுதிக்கு சென்ற அவர், அங்கு ரூ.42 மதிப்பீட்டில் நடைபெற உள்ள தடுப்பணை தூர்வாருதல் மற்றும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், சோலையார் அணைப் பகுதிக்கு சென்று, அங்கு புதிதாக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி மண்டலப் பொறியாளர் திருமாவளவன், ஆணையாளர் வெங்கடாசலம், நகராட்சித் தலைவர் சத்தியவாணிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

அம்மாபேட்டையில் ரூ. 49 லட்சத்தில் தார்ச்சாலை பணி

Print PDF

தினமணி           10.01.2014

அம்மாபேட்டையில் ரூ. 49 லட்சத்தில் தார்ச்சாலை பணி

அம்மாபேட்டை பேரூராட்சியில் ரூ. 49 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

நபார்டு திட்டத்தின் கீழ், மூனாஞ்சாவடி முதல் மாரப்பனூர் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து பேரூராட்சித் தலைவர் டி.செந்தில்குமார் தொடக்கி வைத்தார். ரூ. 49 செலவில் 1.4 கி.மீ. தொலைவுக்கு இச்சாலை அமைக்கப்படுகிறது.

துணைத் தலைவர் சுந்தரராஜன், நிலவள வங்கித் தலைவர் கே.கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் துவக்க நிழச்சியில் கலந்து கொண்டனர்.

 


Page 189 of 3988