Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடிசை மாற்றுவாரியம் மூலம் ரூ.117 கோடி செலவில் 1472 அடுக்குமாடி குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு

Print PDF

மாலை மலர்            09.01.2014

குடிசை மாற்றுவாரியம் மூலம் ரூ.117 கோடி செலவில் 1472 அடுக்குமாடி குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு
 
குடிசை மாற்றுவாரியம் மூலம் ரூ.117 கோடி செலவில் 1472 அடுக்குமாடி குடியிருப்புகள்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை, ஜன.9 - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் இதுவரை 1.31 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பழுதடைந்துள்ள குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் பழுதுப்பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இக்குடியிருப்புகளில் சீர் செய்தல் பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டிற்கு (2013–14) 10 கோடி ரூபாயும் அடுத்த ஆண்டிற்கு (2014–15) 15 கோடியே 77 லட்சம் ரூபாயும் என மொத்தம் 25 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 177 திட்டப் பகுதிகளில் உள்ள 29,028 குடியிருப்புகளில் உள்ள பழுதுகள் சரிபார்க்கும் பணிகள் நிறைவேற்றப்படும்.

குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை நகரில் ஆட்சேபகரமான பகுதிகளில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை, மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்வு திட்டம் வாயிலாக மாற்றிடத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யும் பொருட்டு, ஒக்கியம் துரைப் பாக்கம் கண்ணகி நகர் திட்டப்பகுதியில் இதுவரை 15,656 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இதே திட்டப்பகுதியில் 8,048 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

தற்பொழுது இப்பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இங்கு வாழும் மக்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரில் வாழும் மக்களின் நலனுக்காக அதிக அளவு அரசு போக்குவரத்து பேருந்துகளை இயக்குவதற்காக, தற்பொழுது கண்ணகி நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை மேம்படுத்தி 20 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்ப தளங்கள், பயணிகளுக்கான இடவசதி, நிர்வாகக் கட்டடம், நேரக்காப்பாளர் அலுவலகம், பயணிகள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய பணிமனையுடன் கூடிய பேருந்து முனையத்தை கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களை மறு குடியமர்வு செய்ய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி வார்டு எண்.96 கக்கன்ஜி நகரிலுள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மாற்று குடியமர்வு திட்டமாக 84 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதி-1 திட்டத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக 1,056 அடுக்குமாடிக் குடியிருப்புகள், அத்திப்பட்டு பகுதி-2 திட்டத்தில் 32 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் 416 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 117 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் மாநில அரசின் மானியமாக அத்திப்பட்டு பகுதி-1 திட்டத்திற்கு 31 கோடியே 5 லட்சம் ரூபாயும், அத்திப்பட்டு பகுதி-2 திட்டத்திற்கு 11 கோடியே 63 லட்சம் என 42 கோடியே 68 லட்சம் வழங்குவதற்கும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் 271 சதுரஅடி தரைப்பரப்பளவு கொண்டதாகவும், இரு அறைகள், சமையலறை, பால்கனி மற்றும் கழிவறையுடனும் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் உத்தரவு

Print PDF

தினத்தந்தி               09.01.2014

திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் உத்தரவு

திருப்பூர் மாநகராட்சியில் வரிவசூலை 100 சதவீதம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நிதிக்குழு தலைவர் ஆர்.சந்திரசேகர் உத்தர விட்டார்.

வரிவிதிப்பு

திருப்பூர் மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் மாநகராட்சி அலு வலக கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு நிதிக்குழு தலைவர் ஆர்.சந்திர சேகர் தலைமை தாங்கி னார். உதவிஆணையர் (கணக்கு) விஜயகுமார் முன்னிலை வகித் தார். உறுப்பினர்கள் கீதா ஆறுமுகம், நஜ்முதீன், உதவி ஆணையர் வாசுக்குமார், செல்வநாயகம், வருவாய் ஆய் வாளர்கள், சுகாதார ஆய் வாளர்கள் கலந்து கொண் டனர்.

கூட்டத்தில் உறுப்பினர் கீதா ஆறுமுகம் பேசும்போது, ‘‘சூசையாபுரம் கிழக்கு, எம்.ஜி.ஆர்.காலனி, டி.எம்.சி.காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரை வரி விதிக்கவில்லை. அங்கு குடிநீர் இணைப்பு உள்பட அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள ஆக்கிர மிப்பு கடைகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்துவ தில்லை’’ என்றார்.

செல்போன் கோபுரங்கள்

உறுப்பினர் நஜ்முதீன் பேசும் போது, ‘‘பூலவாரி சுகுமார் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடு களுக்கு வரி விதித்து, அவர் களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். இது போல் பெரியகடைவீதியில் பலர் தொழில்வரி செலுத்தா மல் தொழில்நடத்தி வருகிறார் கள். அங்கு வரிகளை உரிய முறையில் வசூல் செய்ய வேண்டும். செல்போன் கோபு ரங்கள் நகரில் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு உரிய வரி விதிக்க வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து தலை வர் ஆர்.சந்திரசேகர் பேசும் போது கூறியதாவது:–

வரி வசூலை பொருத்து தான் மாநகராட்சியின் நிர் வாகத்தை பெருக்க முடியும். மாநகராட்சியில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. வருகிற ஏப்ரல் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால் அதற்கு முன்பாக வரிவசூலை செய்து முடிக்க வேண்டும் என்று மேயரும், துணைமேயரும் கூறி உள்ளனர்.

100 சதவீதம் வரிவசூல்

எனவே 100 சதவீதம் வரி வசூலை மார்ச் மாத இறு திக்குள் செய்து முடிக்க வேண் டும். மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் தான் இதற்கு முழு முயற்சி எடுக்க வேண் டும். நீண்ட நாட்களாக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பை பார பட்சம் இன்றி துண்டிக்க வேண்டும்.

அதுபோல் தொழிலாளர் கள் நிறைந்துள்ள திருப்பூரில் தொழில்வரி மிகவும் குறை வாக உள்ளது. 3,355 பேருக்கு மட்டும் தான் புதிதாக தொழில்வரி விதிக்கப்பட்டு உள்ளது. டி.எல்.ஓ. எனப்படும் அபாயகரமான தொழிற் சாலைகளுக்கான உரிமம் அதிகரிக்கப்பட வேண் டும்.

வாகன காப்பகங்கள்

இதுதவிர மாநகரில் 75 சதவீத நிறுவனங்கள் உரிமம் இன்றி இயங்கி வருகிறது. இதுபோல் வாகன காப்பகங் கள், செல்போன் கோபுரங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு நிலவரி மட்டுமே செலுத்து கிறார்கள். எனவே இவற்றுக்கு தனி வரி விதிக்க வேண்டும்.

புதிதாக குடிநீர் இணைப்பு கொடுத்து அனைவருக்கும் முறையாக அட்டை வழங்கி, குடிநீர் கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் குடிசைமாற்று வாரிய பகுதி களில் வீடுகட்டி வசிப்பவர் களுக்கும், சூசையாபுரம் கிழக்கு, எம்.ஜி.ஆர்.காலனி, டி.எம்.சி.காலனி ஆகிய பகுதிகளில் புதிதாக பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்கும் உடனே வரி வதிக்க வேண்டும்.

இவ்வாறு தலைவர் சந்திரசேகர் பேசினார்.

 

கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு உதவும் திட்டம் தொடக்கம்

Print PDF

தினத்தந்தி               09.01.2014

கோவை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு உதவும் திட்டம் தொடக்கம்

பிரசவித்த பெண்களுக்கு உடைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு துணிகள் வழங்கும் திட்டம் மாநகராட்சி மருத்துவமனைகளில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

பிரசவ எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒரு மாதத்திற்கு 1,540 பிரசவங்கள் நடக்கிறது. இதில் தனியார் மருத்துவமனைகளில் 1000 பிரசவங்களும், கோவை அரசு ஆஸ்பத்திரியில் 400 பிரசவங்களும், மாநகராட்சி மருத்துவமனைகளில் 150 பிரசவங்களும் ஆகிறது.

மாநகராட்சி மருத்துவனைகளில் பிரசவ சதவீதம் 11 ஆக உயர்ந்துள்ளது.

புதிய திட்டம் தொடக்கம்

கோவை மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவத்துக்காக தாய்மார்கள் அனுமதிக்கப்படும்போது, 3 நாட்களுக்கு காலையில் பால், ரொட்டி, மதியம் முட்டையுடன் சாப்பாடு, இரவு டிபன் ஆகியவை வழங்கப்படுகிறது.

தற்போது புதிய திட்டமாக பிரசவித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உடைகள், 6 பேபி நாப்கின்கள், ஒரு கொசுவலை, தாய்மார்களுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் ஒரு பேபி டவல் உள்பட ரூ.631 மதிப்புள்ள பொருட்களை வழங்கப்பட உள்ளன.

இதற்கான திட்ட தொடக்க விழா புரூக்பாண்ட் ரோட்டில் உள்ள மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவ மையத்தில் நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் லதா, சேலஞ்சர்துரை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த திட்டம் குறித்து மேயர் செ.ம.வேலுசாமி பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து நகர்நல மையத்துக்கும் இந்த திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.

ரூ.50 லட்சம் வசதிகள்

சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் கர்ப்பிணி பெண்களுக்கான அறுவை சிகிச்சை மையம், ஸ்கேனிங் கருவி, எக்ஸ்ரே கருவிகள் பொருத்தும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்தப்படும். கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல பகுதிகளிலும் ஸ்கேன் வசதி மற்றும் எக்ஸ்ரே கருவி மையங்கள் கர்ப்பிணி பெண்களுக்காக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 5 மருத்துவமனைகள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றுதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் ஆதிநாராயணன், கே.ஆர்.ஜெயராமன், பெருமாள்சாமி, மாநகராட்சி குழு தலைவர்கள் தாமரைச்செல்வி, சாந்தாமணி, அம்மன்அர்ஜுனன், செந்தில்குமார், வக்கீல் ராஜேந்திரன், மாநகராட்சி துணை கமிஷனர் சிவராசு , மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் அருணா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 191 of 3988