Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை சொத்துவரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்           08.01.2014

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை சொத்துவரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அனுப்பர்பாளையம், : திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட          தொகைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையை திருப்பூர்    மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலப்பகுதியில் கடந்த 2012-2013ஆம் ஆண்டிற்கு செலுத்த வேண்டிய ரூ.29 லட்சத்து 7ஆயிரத்து 624 வரி நிலுவையில் உள்ளது. நடப்பாண்டில் செலுத்த வேண்டிய ரூ.4 கோடியே 91 லட்சத்து 26ஆயிரத்து 562 வரி நிலுவையில் உள்ளது. மொத்தம் ரூ.5   கோடியே 70 லட்சத்து 34 ஆயிரத்து 126  வரி நிலுவையில் உள்ளது. சென்ற நிதியாண்டில் 72 சதவீதம் வசூலானது. நடப்பாண்டில் இது வரை 41.60 சதவீதம் மட்டும் வசூலாகியுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக வரி வசூல் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை குடிநீர் துண்டிப்பு அறிவிப்பு செய்திருந்தனர். இதையடுத்து, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் உத்தரவின்பேரில், முதலாவது மண்டல உதவி ஆணையாளர் முகமதுஷபியுல்லா முன்னிலையில், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், குழாய் ஆய்வாளர் மசாருதீன், வருவாய் உதவியாளர் பிரபாகரன், மாநகராட்சிப் பணியாளர்கள், சொத்துவரி, குடிநீர் கட்டணம், உள்ளிட்டக் கட்டணத் தொகைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில், சாமுண்டிபுரம் முதலாவது வீதியை சேர்ந்த கனகராஜ், 11-ஆவது வார்டு பாரதி நகர் பிரேமலதா, ஈ.பி.காலனியைச் சேர்ந்த ரகு ஆகியோரது சொந்த கட்டிடத்தின் முன்புறம் இருந்த குடிநீர் இணைப்பை நேற்று அதிகாரிகள் துண்டிப்பு செய்தனர்.

மீண்டும் குடிநீர் இணைப்பை பெற, அபராதம் செலுத்த வேண்டும் என்பதால் பொதுமக்கள் உடனடியாக வரியினங்களின் பாக்கிகளை செலுத்த உடனடியாக முன்வர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

 

கீழப்பாவூர் பேரூராட்சியில் கைத்தறி தின விழா

Print PDF

தினகரன்           08.01.2014

கீழப்பாவூர் பேரூராட்சியில் கைத்தறி தின விழா

பாவூர்சத்திரம், : நெல்லை மாவட்ட கலெக் டர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கைத்தறி தின விழா நடந்தது.

அனைத்து அரசு ஊழியர்கள் கதர் வேட்டி, சட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.   கீழப் பாவூர் பேரூராட்சியில் தலைவர் பொன்அறிவழகன் தலைமையில் பணியாளர் கள் கைத்தறி தினவிழா கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலு வலர் விஜயகுமார், துணை தலைவர் தங்கச்சாமி, வட்டார காங். தலைவர் சுப்பிரமணியன், அலுவலக பணியாளர்கள் தனுஷ் கோடி, தர்மராஜ், சிவ னனைந்தபெருமாள், ஜவஹர், ஜஸ்டின் திர வியம், ராமர், முத்துசாமி, முருகன், தங்க ராஜ், சுப்புலட்சுமி, திருமலை வடிவு அம்மாள், துப்புரவு பணியாளர்கள் செல்வன், தியாகராஜன், முருகன், செல்லப்பா, ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

Print PDF

மாலை மலர்            08.01.2014

சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு
 
சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

சென்னை, ஜன. 8 - சென்னை நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையோர பூங்காக்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடங்கள், குடியிருப்பின் முன்பு மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் பூங்காக்கள் உள்ளன.

தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் 486 பூங்காக்கள் உள்ளன. இது மற்ற நகரங்களை விட மிக குறைவு ஆகும்.

டெல்லியில் 15 ஆயிரம் பூங்காக்கள் உள்ளன. மும்பையில் 1,300 பூங்காக்களும், பெங்களூரில் 721, ஐதராபாத்தில் 709 பூங்காக்களும் உள்ளன. ஆனால் சென்னையில் மட்டும் பூங்காக்கள் எண்ணிக்கையில் 486 மட்டுமே உள்ளது. இதை அதிகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் அதிக எண்ணிக்கையில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. எந்தெந்த பகுதியில் பூங்காக்கள் அமைக்கலாம் என பூங்காக்கள் பிரிவு ஆய்வு செய்தது. அதன்படி 224 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சென்னையில் வீடு கட்டும்போது பசுமை திட்டத்தின் கீழ் கூடுதலாக இடைவெளி விட வேண்டும் என்று பெருநகர வளர்ச்சி குழுமம் நிபந்தனை விதித்துள்ளது. அதன் படிதற்போது 0.46 சதுர அடியாக இருக்கும் இடைவெளியை 17 சதுர அடியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

சென்னையில் பூங்காக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்து பராமரிப்பது இல்லை, குடியிருப்பு வாசிகளே இணைந்து சிறந்த முறையில் பராமரிப்பதாக டிரீ கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த குறையை சரி செய்ய பூங்காக்கள் பராமரிப்பு துறைக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், புதிதாக கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

இதே போல் சென்னையில் பெண்களுக்கு தனி விளையாட்டு மைதானங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதலாவதாக கோடம்பாக்கத்தில் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 33 கிரவுண்டில் விளையாட்டு மைதானம் உள்ளது.

இதில் 11 கிரவுண்டு நிலத்தில் பெண்களுக்கு பேட் மின்டன் கோர்ட், கைப்பந்து, இறகு பந்து மைதானங்கள் தனியாக அமைக்கப்படுகிறது.

இதற்காக இங்குள்ள ஆண்களுக்கான விளையாட்டு மைதானத்தில் கால் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து மைதானங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. அருகில் உள்ள பள்ளி மாணவ – மாணவிகளும் பயன்பபடுத்திக் கொள்ளுமாறு உருவாக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மற்ற மைதானங்களிலும் பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட உள்ளது.

 


Page 193 of 3988