Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பெருந்துறையில் ரூ.47.05 லட்சம் திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி               08.01.2014

பெருந்துறையில் ரூ.47.05 லட்சம் திட்டப் பணிகள் துவக்கம்

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, பெருந்துறை அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் புதிய திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியில் பவானி பிரதான சாலை முதல் வழுவுக்காடு பிரதான வீதி இறுதி வரை ரூ.8 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய தார்ச் சாலை புதுப்பிக்கும் பணி, பாண்டியன்வீதி முதல் வழுவுக்காடு வரை ரூ.7.6 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய தார்ச் சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்தின்கீழ், பெருந்துறை அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணி உள்பட மொத்தம் ரூ.47.05 மதிப்பிலான 7 புதிய திட்டப் பணிகளை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார்.

இந் நிகழ்ச்சியில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் எஸ். பெரியசாமி, துணைத் தலைவர் விஜயன், வெட்டையங்கிணறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் திங்களூர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

வடவள்ளியில் பூங்கா திறப்பு

Print PDF

தினமணி               08.01.2014

வடவள்ளியில் பூங்கா திறப்பு

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வடவள்ளியில் ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.30 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட பூங்காவை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சியின் 17-ஆவது வார்டுக்கு உள்பட்ட நவாவூர் பிரிவு அருகே உள்ளது குருசாமி நகர். இங்குள்ள 1 ஏக்கர் ரிசர்வ் சைட்டில் புதிய பூங்கா உருவாக்க ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிறுவனம், மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, மாநகராட்சியின் அனுமதியுடன் ரூ.30 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், கான்கிரீட் நடைபாதை, இருக்கைகள், திறந்த வெளி அரங்கு, புல்வெளிகள், மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள், குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டன.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த பூங்கா திறப்பு விழாவிற்கு, ஸ்ரீ தக்சா பிராப்பர்டி டெவலப்மெண்ட் நிர்வாக இயக்குநர் ஆர்.மோகன், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறுவனத்தின் பொதுமேலாளர் ராம.வேலாயுதம் அறிமுக உரையாற்றினார். மேயர் செ.ம.வேலுசாமி தலைமை வகித்து பூங்காவைத் திறந்து வைத்து, மரக்கன்றுகள் நட்டார்.

  மாநகராட்சி ஆணையர் ஜி.லதா, சட்டப்பேரவை உறுப்பினர் மலரவன், மண்டல உதவி ஆணையர் டி.சுப்பிரமணியம், துணை மேயர் லீலாவதி உண்ணி, ஸ்ரீ தக்சா நிறுவன இயக்குநர்கள் ஆர்.ராமநாராயணன், அருள் ஆண்டனி மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தக்சா நிறுவனத் தகவல் தொடர்பு அலுவலர் கணேசன் செய்திருந்தார்.

 

மாநகராட்சியில் ரூ.57 லட்சத்தில் திட்டப் பணிகள்: மேயர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி               08.01.2014

மாநகராட்சியில் ரூ.57 லட்சத்தில் திட்டப் பணிகள்: மேயர் திறந்து வைத்தார்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 17 மற்றும் 18-ஆவது வார்டுகளில் ரூ.56.80 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தா.மலரவன், ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தனர்.

17-ஆவது வார்டு வடவள்ளி மகாராணி அவின்யூ பகுதியில் மாநகராட்சி பொது நிதி ரூ.14.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தையும், வடவள்ளி குருசாமி நகர் பகுதியில் தக்ஷô நிறுவனம் மூலமாக ரூ.13 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த பூங்காவையும், 18-ஆவது வார்டு வீரகேரளம் சுண்டப்பாளையம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தையும், வீரகேரளம் சத்யா

காலனி பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தையும் மேயர் செ.ம.வேலுசாமி திறந்து வைத்தார்.

வடவள்ளி, சுண்டப்பாளையம் பகுதி நியாய விலைக்கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பண்டிகைக்கான சிறப்புத் தொகுப்பு பொருள்களையும் மேயர் வழங்கினார்.

துணை ஆணையர் சு.சிவராசு, மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி, கண்காணிப்பு பொறியாளர் கணேஷ்வரன், நகரப் பொறியாளர் சுகுமார், உதவி ஆணையர் சுப்ரமணியன், சுகாதார குழுத் தலைவர் தாமரைச் செல்வி, கல்வி குழுத் தலைவர் சாந்தாமணி, நியமனக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 194 of 3988