Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

புதிய மீன் மார்க்கெட்டில் 38 கடைகள் ஏலம்

Print PDF

தினமணி               07.01.2014

புதிய மீன் மார்க்கெட்டில் 38 கடைகள் ஏலம்

வேலூர் பெங்களூரு சாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டில் உள்ள ஷட்டர் போடப்பட்ட 38 கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தற்போது ஆபிஸர்ஸ் லைனில் இயங்கும் மீன்மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்கள் பங்கேற்று 38 கடைகளையும் ஏலத்தில் எடுத்தனர். இக்கடைகளில் குறைந்தபட்ச மாத வாடகை ரூ.5,200 முதல் அதிகபட்ச வாடகை ரூ.6,500 வரை ஏலம் போனது.

ஏலத்தை மாநகராட்சி வருவாய் அலுவலர் (பொறுப்பு) ஆர்.கே.கனகசுந்தரி, சந்தை கண்காணிப்பாளர் தனசேகரன் ஆகியோர் நடத்தினர்.

புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளை மீன் மார்க்கெட் வியாபாரிகளே எடுத்துள்ளதால், தற்போது இயங்கி வரும் மீன் மார்கெட்டை மூடப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுப்பதில் நீடித்து வந்த சிக்கல் நீங்கியுள்ளது.

 

திடக்கழிவு அகற்ற நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாக கட்டணம் வசூல்

Print PDF

தினகரன்           07.01.2014

திடக்கழிவு அகற்ற நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாக கட்டணம் வசூல்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களை முறைப்படுத்தி அந்த நிறுவனங்களில் இருந்து கழிவுகளை சேகரிக்கவும், அதனால் மாநகராட்சிக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைத்திடும் வகையில் நிர்வாக கட்ட ணம் நிர்ணயிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஓட்டல்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், பழக்கடைகளுக்கு சேவை கட்ட ணம் மட்டுமே குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு நிர்வாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் நிர்வாக கட்டணமாக பேக்கரிக்கு 300 ரூபாயும், டீக்கடை மற்றும் பேக்கரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிபன் ஸ்டால்களுக்கு 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும், மெஸ்களுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், உணவு விடுதிகளுக்கு 400 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளுக்கு 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், குளிர்பானம் மற்றும் பழச்சாறு கடைகளுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், பெரிய காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும், சிறிய காய்கறி கடைகள், பழக்கடைகளுக்கு 500 ரூபாயும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயும், சிறிய மளிகை கடைகளுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், ஹார்டுவேர் சிறிய கடைகளுக்கு 250 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 750 ரூபாயும் நிர்வாக கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிர்வாக கட்டணம் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

வலங்கைமானில் 2917 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள்: அமைச்சர் காமராஜ் வழங்கினார்

Print PDF

மாலை மலர்            06.01.2014

வலங்கைமானில் 2917 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள்: அமைச்சர் காமராஜ் வழங்கினார்

வலங்கைமான், ஜன.6 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் பொங்கல் தினத்தையொட்டி பொங்கல் தொகுப்பு பொருள்கள் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கும் விழா வலங்கைமான் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருவாரூர் கலெக்டர் சி.நடராஜன் தலைமை தாங்கினார். விழாவில் 2917 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி சேலைகளையும் அரிசி வாங்கும் குடும்ப அட்டை பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு பைகளையும் அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கி பேசும்போது கூறியதாவது:-

நமது மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடின்றி வளர்ச்சி பெற வேண்டும். கிராம மக்கள் சாமானிய அடிதட்டு மக்களும் அரசின் அனைத்து திட்ட பயனையும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதலமைச்சர் திட்டங்களை அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 190 பயனாளிகளுக்கு விலையில்லா பொங்கல் பைகள் 3 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்படுகிறது.

இது போன்று அனைத்து திட்டங்களை பயன்படுத்தி முதலமைச்சருக்கு அரசிற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து ஊத்துக்காடு ஊராட்சியில் 424 பயனாளிகளுக்கும், வேலங்குடி ஊராட்சியில் 412 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, கிரைண்டர் மிக்சி ஆகியவற்றை உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மாத்தூர் அ.குருமூர்த்தி, மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளர் அழகிரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயலெட்சுமி அம்பிகாபதி, ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி ராஜமாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் உதவி கலெக்டர் பரமசிவம் மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன், தாசில்தார் வெங்கட்ராமன், ஒன்றிய திட்ட ஆணையர் தில்லை நடராஜன், வார்டு உறுப்பினர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் பேரூராட்சி மன்ற தலைவர் மாஸ்டர் எஸ்.ஜெயபால், ஊத்துகாடு ஊராட்சி மன்ற தலைவர் சாந்திதேவராஜன், வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 


Page 196 of 3988