Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தர்மபுரி நகராட்சிக்கு ரூ2 கோடியில் புதிய அலுவலகம் கட்டுமானப்பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன்             06.01.2014

தர்மபுரி நகராட்சிக்கு ரூ2 கோடியில் புதிய அலுவலகம் கட்டுமானப்பணிகள் தீவிரம்

தர்மபுரி, : தர்மபுரி நகராட்சிக்கு ரூ. 2 கோடி மதிப்பில் புதிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தர்மபுரி 1964ம் ஆண்டு முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 1971ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும், 2008ம் ஆண்டில் இருந்து தேர்வுநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகராட்சியின் மொத்த பரப்பளவு 11.65 ச.கி.மீட்டர் ஆகும். நகரின் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 68 ஆயிரத்து 595 ஆகும். நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.

நகராட்சியின் கட்டிடங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டவை. மேலும், நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது உள்ள கட்டிடங்களில் அலுவலகம் செயல்படுத்தவும், பணியாளர்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் தமிழக முதல் அமைச்சரின் இயக்கமும்- பராமரிப்பு மற்றும் இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் புதியதாக நகராட்சிக்கு கட்டிடம் கட்ட ரூ140 லட்சம் மற்றும் நகராட்சி பொது நிதியில் ரூ60 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த நவம்பர் 9ம் தேதி நடந்தது. புதிய அலுவலக கட்டப்படும் இடத்தின் மொத்த பரப்பளவு 17ஆயிரத்து 760.45 ச.அடி ஆகும். இதில் தரைதளம் 5,968.55 சதுர அடி, முதல் தளம் 5,868.61 சதுர அடியில் மற்றும் இரண்டாம் தளம் 5,868.61 சதுர அடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எளிதில் தெரியும் வகையில் தரைதளத்தில் காத்திருப்போர் அறை, தகவல் மையம், நகர்மன்றத் தலைவர் அறை, ஆணையர் அறை, பொதுப்பிரிவு, கணினி அறை, சமுதாய அமைப்பாளர்கள் அறையும், முதல் தளத்தில் சுகாதார அலுவலர், பொது சுகாதாரப்பிரிவு, வருவாய்ப்பிரிவு, நகரமைப்பு பிரிவு, நகராட்சி பொறியாளர் மற்றும் பொறியியல் பிரிவும், இரண்டாம் தளத்தில் நகர்மன்றக்கூடம், பதிவேடுகள் பாதுகாப்பு அறையும் திட்டமிடப்பட்டது.

மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியும் செய்யப்பட உள்ளது. கட்டிடத்தில் லிப்ட் வசதியும், நவீன கழிப்பறை வசதிகள் கட்டப்பட உள்ளது. தற்போது கட்டுமானப்பணிகளில் பில்லர் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. பேஸ்மெண்ட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

நகராட்சி பகுதியில் ஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி

Print PDF

தினகரன்             06.01.2014

நகராட்சி பகுதியில் ஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி நகராட்சியில் sஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆனதாலும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயில் தேங்கியதாலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் எளிதில் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நகரின் முக்கிய பகுதிகளான ரவுண்டானா, காந்திரோடு, பெங்களூர் ரோடு, சேலம் ரோடு, சென்னை சாலை போன்ற பகுதிகளில் மழை காலம் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்களும், வணிகர்களும் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து புனரமைக்க ஒரு கோடி ஒருங்கிணைந்த நிதி, வருவாய் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு காந்தி ரோடு உள்பட முக்கிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது ரவுண்டானா 5 ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை நகர்மன்ற தலைவர் தங்கமுத்து நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக செய்து முடிக்கவும், கால்வாய் பகுதியில் செல்லும் டெலிபோன் உள்பட தொலைதொடர்பு கேபிள்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் செய்யும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகர்மன்ற உறுப்பினர் பழனி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

போர்வெல் மினிடேங்க் திறப்பு

Print PDF

தினகரன்             06.01.2014

போர்வெல் மினிடேங்க் திறப்பு

இடைப்பாடி, : இடைப்பாடி நகராட்சி சின்னமணலி 18வது வார்டில் பேர்வெல் மினிடேங்க் ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை இடைப்பாடி நகர்மன்ற தலைவர் கதிரேசன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் ராமன், பாசறை இளம்பெண் நகர செயலாளர் சங்கர்கணேஷ், நாராயணன், கவுன்சிலர் ரோகினி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து மினிடேங்க் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

 அதேபோல் ரூ.ஒரு லட்சம் மதிப்பில் அதே பகுதியில் மற்றொரு மினிடேங்கை நகர் மன்ற தலைவர் கதிரேசன் திறந்து வைத்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 


Page 197 of 3988