Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குமாரபாளையத்திற்கு ரூ.28 லட்சத்தில் புதிய ரோடு

Print PDF

தினமலர்               06.01.2014

குமாரபாளையத்திற்கு ரூ.28 லட்சத்தில் புதிய ரோடு

அன்னூர் :அன்னூரில் "நபார்டு' திட்டத்தில் ரூ.28 லட்சத்தில் ரோடு போட பூமி பூஜை நடந்தது.
அன்னூர் - சொக்கம் பாளையம் ரோட்டிலுள்ள ஜெ.ஜெ., நகரிலிருந்து, குமாரபாளையம் செல்ல 40 அடி மண் பாதை உள்ளது.

இப்பாதையில் ரோடு போட்டால், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் சொக்கம்பாளையம் செல்லாமலே குமாரபாளையம் போக முடியும். அங்கிருந்து எளிதில் கோவை ரோட்டுக்கும் செல்ல முடியும். இந்த பாதையில் ரோடு போட பல ஆண்டுகளாக கோரி வந்தனர். இந்நிலையில் "நபார்டு' திட்டத்தில், இந்த பாதையில் ரோடு போட அனுமதி அளிக்கப்பட்டது. ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன் தினம் பூமி பூஜையுடன் பணியை பேரூராட்சி தலைவர் ராணி, துணை தலைவர் விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம், கவுன்சிலர்கள் பூமணி தங்கராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்

Print PDF

தினமலர்               06.01.2014

மாநகராட்சி துவக்கப்பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்

கோவை :மாநகராட்சிக்கு உட்பட்ட துவக்கப்பள்ளிகளில், விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பல்வேறு உபகரணங்கள் வாங்க, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில், 16 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர் நிலைப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 41 துவக்கப்பள்ளிகள், சிறப்பு மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி தலா ஒன்று என, 83 பள்ளிகள் உள்ளன.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு கல்வியுடன், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், மாநகராட்சி வசமுள்ள துவக்கப்பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 55 உள்ளன. இதில், பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில், விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. 20 பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் நிறுவ வேண்டியுள்ளது. அந்த பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து, விளையாட்டு உபகரணங்கள் நிறுவ 60 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டதும், துவக்கப்பள்ளிகளில் சீசா, சறுக்கு, ஊஞ்சல், படிக்கட்டு விளையாட்டு உள்ளிட்ட உபகரணங்கள் நிறுவப்படவுள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் முறை புகுத்தப்பட்டுள்ளதால், கல்வித்திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கவும், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், சக மாணவர்களுடன் குழுவாக விளையாட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி கல்வி நிதியில், விளையாட்டு மைதானங்களை மேம்படுத்தி, விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்படுகிறது' என்றார்.

மாணவர்களுக்கு செயல்வழிக்கற்றல் முறை புகுத்தப்பட்டுள்ளதால், கல்வித்திறனில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கவும், விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், சக மாணவர்களுடன் குழுவாக விளையாட வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

 

தனியார் நிலத்தில் விளையாட்டு மைதானம்: மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்               06.01.2014

தனியார் நிலத்தில் விளையாட்டு மைதானம்: மாநகராட்சி முடிவு

சென்னை:திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 60 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் தனியார் விளையாட்டு மைதானத்தை, வளர்ச்சி உரிமை மாற்றம் மூலம், மாநகராட்சி வசம் எடுத்து கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள விம்கோ நகரில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, மூன்று ஏக்கர் காலி நிலம் உள்ளது. அந்த இடத்தை, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள், விளையாட்டு மைதானமாக பயன்
படுத்தி வருகின்றனர்.

திருவொற்றியூரில் வேறு எந்த இடத்திலும் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில், அந்த நிலம், அந்த பகுதி இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. திடீரென, தனியார் நிறுவனம், விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த பகுதிவாசிகள், மாநகராட்சி அந்த நிலத்தை பெற்று, விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் வளர்ச்சி உரிமை மாற்றம் மூலம், குறிப்பிட்ட நிலத்தை பெற்று, அங்கு விளையாட்டு மைதானம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

தற்போது, ஒரு லட்சத்து 32 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட அந்த இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைத்தால், தனியார் நிறுவனத்திற்கு, நில பரப்பளவை காட்டிலும் இரண்டரை மடங்கு கூடுதலாக எப்.எஸ்.ஐ., (தள பரப்பு குறியீடு) கிடைக்கும். இது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'தனியார் நிறுவனம் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் எப்.எஸ்.ஐ., கொடுத்து நிலத்தை பெறுவோம். இல்லாவிட்டால் நிலம் கையகப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.

 


Page 199 of 3988