Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகளை திறக்க தாமதம் ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினகரன்                03.01.2014

புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகளை திறக்க தாமதம் ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நோட்டீஸ்

தேனி, : தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை ஏலம் எடுத்தவர்கள், அவற்றை திறக்காமல் உள்ளனர். இதனால் பயணிகள் சிரமப்படுவதால், ஏலதாரர்கள் கடைகளுக்கான வாடகை முன்பணத்தை உடனடியாக செலுத்தி கடைகளை திறக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேனியில் இருந்து பெரியகுளம் செல்வதற்கான பை-பாஸ் சாலையில் 7.35 ஏக்கர் நிலத்தில் ரூ.15 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டுள்ளது.

 இந்த பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள், 2 உணவகங்கள், 6 நவீன கட்டணக் கழிப்பறைகள், 2 இலவச கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறைகள், 3 வாகனங்கள் நிறுத்தும் இடம், புறக்காவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி,  பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. பஸ் ஸ்டாண்ட்டிற்கு முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் பெயர் சூட்டப்பட்டது.

 கடந்த 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் இந்த பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்தார்.
தேனி நகரில் இருந்து 2 கி.மீ தொலைவில் இந்த பஸ் ஸ்டாண்ட் உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்டில் 67 கடைகள் இருந்த போதிலும், இதுவரை ஒரு கடையும் திறக்கப்படவில்லை.

கட்டண கழிப்பறைகளும், டூவீலர் ஸ்டாண்டுகளும் திறக்கப்படவில்லை. இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பயணிகள் புகார் செய்து வருகின்றனர். இதையடுத்து தேனி-அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதில், ‘கடை உள்ளிட்ட பிற இனங்களை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், நோட்டீஸ் பெற்ற 15 நாட்களில் ஒரு ஆண்டுக்கான வாடகை தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும்.

ரூ.20 பத்திரத்தில் உறுதிமொழி ஒப்பந்தம் எழுதி அதனையும் இணைத்து நகராட்சியில் ஒப்படைத்து, கடைகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடியாக கடைகளை திறக்க வேண்டும்‘ என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராஜாராம் கூறுகையில், “புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்துக் கடைகளும் கடந்த ஆண்டே ஏலம் விடப்பட்டன.

 ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் ஒரு ஆண்டிற்கான வாடகையை டெபாசிட்டாக செலுத்தி, பத்திரத்தில் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து விட்டு, கடையை உடனடியாக திறக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது“ என்றார். 

 

பல்லடம் நகராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்                03.01.2014

பல்லடம் நகராட்சி கூட்டம்

பல்லடம்,: பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வைஸ்.பி.கே.பழனிச்சாமி, ஆணையாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சித்திக்(திமுக): எனது வார்டில் பட்டேல் வீதிக்கு பச்சாபாளையம் பகுதியில் இருந்து தண்ணீர் தர மறுக்கின்றனர். வார்டுக்கு தலா 5 தெருவிளக்கு அமைத்து தருவதாக கூறி ஒரு ஆண்டு ஆகிறது. இன்னும் தெருவிளக்கு அமைத்து தரவில்லை.

சண்முகம்: எனது வார்டில் சுகாதார பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மேற்கு பல்லடத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டியில் இருந்து 13வது வார்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

கிருஷ்ணக்குமார்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை நகராட்சி முன்புறம் அமைக்க வேண்டும் எனக் கூறி ஆணையாளர் நாராயணனிடம் கடிதம் கொடுத்தார். பின்னர் அது, அனைவரின் ஒப்புதலுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தலைவர் சேகர்: சுகாதார பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். அத்திக்கடவு 3ம் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுகிறது. அந்த பணி முடிந்தவுடன் அனைத்து வார்டுக்கும் குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கப்படும். மேலும் அண்ணா வணிக வளாகத்தின் மேல் தளத்தில் 40 கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கடைசி கூட்டத்தில் பல்லடம் முதல் நிலை நகராட்சி சராசரி வருமானம் ரூ.7கோடியாக உள்ளதால் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு கருத்துரு அனுப்புவது உள்ளிட்ட 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Saturday, 04 January 2014 05:09
 

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினகரன்                03.01.2014

சுரண்டை பேரூராட்சியில் பொது சுகாதார விழிப்புணர்வு முகாம்

சுரண்டை, : சுரண்டை பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல் பாடு மற்றும் பொது சுகா தாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ஜெயராணிவள்ளி முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித் தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா வரவேற்றார்.

முகாமில் செயல் அலுவலர் பொன்னம்பலம் கலந்து கொண்டு பேசுகை யில், ‘சுரண்டை பேரூராட்சி பகுதியில் பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய  மற்றும் மாநில அரசுகள் மானியத்துடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனி நபர் குழுக் கடன், சுழல் நிதி விரைவில் வழங்கப்படும். தனிநபர் கழிப்பிடம் அவசியம். பொது சுகாதாரத்தை பெரியோர், சிறியோர் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார். பின்னர் அவர் பொது சுகாதார விழிப்புணர்வு நோட்டீசை பொது மக்களிடம் வழங்கினார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், வசந்தா, செல்வி, கண்ணன், செல்வன், அருணாசலக்கனி, கல்பனா, சமுத்திரக்கனி, சங்கரா தேவி, இந்திரா, மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பொன்னுத்தாய், ஜீவக்கனி, சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 212 of 3988