Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி                 03.01.2014

சாலைப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரோவர் வளைவிலிருந்து, எளம்பலூர் இணைப்பு சாலை வரையிலும் ரூ. 1.90 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், சீரான போக்குவரத்தை உருவாக்கும் வகையிலும், சாலையில் மழைநீர் தேங்காத வகையிலும் சாலைகள் அமைக்க வேண்டும் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், புதிய பேருந்து நிலைய வாளாகத்தை விரிவுபடுத்த தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் தரேஸ் அஹமது. இந்த ஆய்வின்போது, நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தாண்டவமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

எடப்பாடியில் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகங்கள்

Print PDF

தினமணி                 03.01.2014

எடப்பாடியில் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகங்கள்

எடப்பாடி நகராட்சித் தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடைகளை நகராட்சித் தலைவர் டி.கதிரேசன் வழங்கினார்.

எடப்பாடி பகுதியில் உள்ள 74 தொடக்க,  நடுநிலைப் பள்ளியில் பயிலும் 6,710 மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.

எடப்பாடி நகராட்சித் தொடக்கப் பள்ளியில் தலைவர் டி.கதிரேசன் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் புத்தகம், சீருடைகளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அன்பழகன், செங்குட்டுவேல், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிகாரப்பூர்வமாக இன்று திறக்கப்படுகிறது ஆனந்தா பாலம்

Print PDF

தினமணி                 03.01.2014

அதிகாரப்பூர்வமாக இன்று திறக்கப்படுகிறது ஆனந்தா பாலம்

சேலம் நகரில் கட்டப்பட்டுள்ள ஆனந்தா பாலம் அதிகாரப்பூர்வ முறையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) திறக்கப்படுகிறது.

 சேலம் டவுன் ரயில் நிலையச் சாலையையும், இரண்டாவது அக்ரஹாரத்தையும் இணைக்கும் வகையில் திருமணி முத்தாறின் மேல் இருந்த தரைப்பாலம், நகரில் அதிகரித்துவிட்ட போக்குவரத்தை சமாளிக்க முடியாத வகையில் இருந்தது. இதையடுத்து, அதை இடித்துவிட்டு உயர்நிலைப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

 கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஆனந்தா பாலப் பணிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வந்தது. இந்தநிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை அதிமுக கைப்பற்றியதை அடுத்து, இடம் கையகப்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணுகுச் சாலை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.

இருப்பினும் பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பதில் கால தாமதம் செய்யக் கூடாது என்று பாஜக உள்ளிட்ட அமைப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி இரவில் ஆனந்தா பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திடீரென திறக்கப்பட்டது. கடந்த சில நாள்களாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

 இந்தநிலையில், ஆனந்தா பாலத்தின் திறப்பு விழாவை அதிகாரப்பூர்வ முறையில் நடத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) பாலத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆனந்தா பாலத்துக்கான இணைப்புச் சாலை ரூ.5.81 கோடி மதிப்பிலும், குண்டுபோடும் தெரு பாலத்துக்கான இணைப்புச் சாலை ரூ.2.90 கோடி மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.

 இதன் திறப்பு விழாவும், 50-ஆவது வார்டு எஸ்.ஆர்.எம். தோட்டம் பகுதியில் ரூ.31 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட கிணறு, நீர்த்தேக்கத் தொட்டி, குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.31 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

 மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், எஸ்.செம்மலை எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.மோகன்ராஜ், எம்.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

 


Page 215 of 3988