Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.12.65 கோடியில் புதிய ‘மாமன்ற கூட்ட அரங்கு’

Print PDF

தினகரன்             02.01.2014

மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.12.65 கோடியில் புதிய ‘மாமன்ற கூட்ட அரங்கு’

கோவை, : கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.12.65 கோடி யில் புதிதாக ‘மாமன்ற கூட்ட அரங்கு‘ கட்டப்பட உள்ளது. இதற்கான பணியை விரைவில் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் விக்டோரியா கூட்ட அரங்கு உள்ளது. இது, 1893ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கூட்ட அரங்கில்தான் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாதம்தோறும் நடந்து வருகிறது. இது, மிகவும் பழமையானது.

இக்கட்டடத்தின் தரம், சிவில் இன்ஜினீயரிங் துறைக்கு சவால் விடும் அளவுக்கும், பிரமிப்பு ஊட்டுவதாகவும் உள்ளது. பழைய மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 72 வார்டுகள் மட்டுமே இருந்தன. அப்போது, இந்த கூட்ட அரங்கு போதுமானதாக இருந்தது. ஆனால், தற் போது, வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துவிட்டதால், மாதம்தோறும் இங்கு மாமன்ற கூட்டம் நடத்த இடம் போதுமானதாக இல்லை. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர போதுமான இடவசதி இல்லை.

எனவே, புதிய மாமன்ற கூட்ட அரங்கு கட்ட கடந்த 2012-13ம் ஆண்டு மாநகராட்சி வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புராதன சின்னமாக விளங்கும் விக்டோரியா மன்றத்தை இடிக்காமல், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலேயே ரூ.9.70 கோடியில் புதிதாக மாமன்ற கூட்ட அரங்கம் கட்டுவது என முடிவுசெய்யப்பட்டது.

இதற்காக, அனுமதி வேண்டி கடந்த 24.7.2013 அன்று தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டது. இதையடுத்து, எஸ்.பி.எஸ்.அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரித்தது. அப்போது, பட்ஜெட் தொகை ரூ.12.65 கோடியாக உயர்ந்தது.

இதை, மாநகராட்சி பொது நிதியில் இருந்தே பெற்றுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போது, கட்டட வரைபட அனுமதிக்காக நகரமைப்பு துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் அனுமதி கிடைத்துவிடும், அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் மிக விரைவாக துவங்கும் என மேயர் செ.ம.வேலுசாமி அறிவித்துள்ளார்.

 

பேரையூர் பேரூராட்சியில் 100 சதவீத வரிவசூல் 13வது ஆண்டாக சாதனை

Print PDF

தினகரன்             02.01.2014

பேரையூர் பேரூராட்சியில் 100 சதவீத வரிவசூல் 13வது ஆண்டாக சாதனை

திருமங்கலம், :பேரையூர் பேரூராட்சி தொடர்ந்து 13வது ஆண்டாக 100 சதவீதம் வரிவசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பாலமேடு, டி.கல்லுப்பட்டி, எழுமலை, பேரையூர், பரவை உள்ளிட்ட ஒன்பது பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் பேரையூர் பேரூராட்சியில் இந்தாண்டு 100 சதவீதம் வரிவசூல் செய்து வரிவசூலில் மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த பேரூராட்சியில் வரியினங்கள் மூலம் 18 லட்சம் வசூலிக்க வேண்டும். இந்த இலக்கை பேரூராட்சி எட்டியுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் குருசாமி கூறுகை யில், கடந்த ஜனவரி முதல் டிசம்பர் முடிய ஓராண்டில் பேரூராட்சியில் வரிவசூலில் 100 சதவீதம் வசூலித்து சாதனை படைத்துள் ளோம். ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளாக எங்கள் பேரூராட்சி 100 சதவீதம் வசூலித்து சாதனை படைத்தது. இந்தாண்டு தொடர்ந்து 13ம் ஆண்டாக இந்த சாதனையை படைத்துள்ளோம்’ என்றார்.

 

பல்லாவரம் நகராட்சியில் விரைவில் தொடக்கம்: உணவு கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

Print PDF

தினகரன்             02.01.2014

பல்லாவரம் நகராட்சியில் விரைவில் தொடக்கம்: உணவு கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

தாம்பரம், : பல்லாவரம் நகராட்சியில் உணவு கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 22வது வார்டு ஐஸ்வர்யா நகரில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ90 லட்சத்தில் இதற்கான பணி நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின்படி தினமும் 420 முதல் 440 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும். இதன் மூலம் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 480 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படும். ஒவ்வொரு விளக்கும் 40 வாட்ஸ் கொண்டதாக இருக்கும்.

இதற்கு தினமும் 5 டன் உணவு கழிவு தேவைப்படும். பல்லாவரம் நகராட்சியில் தினமும் 110 டன் குப்பை சேருகின்றன. இதில் 60 சதவீதம் மக்கும் குப்பை. இதில் 20 சதவீதம் உணவு கழிவுகள். உணவு கழிவுகள் அல்லாதவற்றை நீக்கி, மீதியுள்ள உணவு கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படும்.

பல்லாவரம் நகரத்தில் உள்ள 42 வார்டுகளில் 18 பெரிய ஓட்டல்கள், 17 திருமண மண்டபங்கள், 34 சிறிய ஓட்டல்கள் உள்ளன. மேலும் தள்ளு வண்டி, சிறிய டிபன் கடைகளும் நடத்தப்படுகின்றன. ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மின்சார சிக்கனம், பணம் சேமிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆற்காடு நகராட்சியில் முதலில் மாதிரியாக தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வெற்றி பெற்றது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த பணி ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல நகராட்சிகளிலும் செயல்படுகிறது.

 


Page 220 of 3988