Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் ரூ1.50 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை

Print PDF

தினகரன்            31.12.2013

ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் ரூ1.50 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை

ஆத்தூர், : ஆத்தூர் நகராட்சி 9வது வார்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. சேலம்-சென்னை மார்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு வந்து செல்வதால் இந்த பஸ் ஸ்டாண்ட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் ஸ்டாண்ட் வளாகம் குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன.

இதனையடுத்து பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என ஆத்தூர் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து நகரமன்ற தலைவர் உமாராணியின் முயற்சியால் அரசிடம் இருந்து ரூ1.50 கோடி நிதி பெறப்பட்டு, பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாதேஸ்வரன், நகரமன்ற தலைவர் உமாராணி ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மோகன், ஆணையாளர் (பொ) ஜெகதீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் முஸ்தபா, ராமலிங்கம், குணசேகரன், நாகராஜ், அதிமுக நகர துணைச் செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கல்விக்குழு கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன்            31.12.2013

மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கல்விக்குழு கூட்டத்தில் முடிவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சுத்திகரிப்பு கருவி பொருத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் கல்விக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்விக்குழு தலை வர் கவுன்சிலர் பூபதி தலைமை வகித்தார். நகரபொறியாளர் சந்திரன் முன் னிலை வகித்தார். கூட்டத் தில் திருச்சி மாநகராட்சி யில் உள்ள 79 மாநகராட்சி பள்ளிகளுக்கும் ரூ 8.48 கோடி யில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகி றது. இது போல பள்ளிகள் அனைத்திற்கும் தேவை யான தீய ணைப்பு கருவிகள், பொருத்துதல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சுத்திகரிப்பு கருவி பொருத்துல், மாநகராட்சி பள்ளிகள் அனைத்திற்கும் துப்புரவு பணியை தனியாரிடம் ஓப்படைத்து கழிப்பிடம் பராமரிப்பு உள் ளிட்ட பணிக ளை செய்வது, இரவு நேரங்களில் பாதுகாப்பிற்கு தனியார் நிறுவனம் மூலம் காவலாளிகளை நியமிப் பது. பள்ளிக்கு அனை த்து தேவையான உபகரணங்கள் வாங்குவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. கல்விக்குழு கூட்டத்தில் கல்விக்குழு கூறுப்பினர்கள் முஸ்தபா, ரவிசங்கர். வனிதா அன்புலெட்சுமி, பாஸ்கர், கலைவாணன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சியில் மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF

தினகரன்            31.12.2013

மாநகராட்சியில் மக்கள் குறைதீர்கும் நாள் கூட்டம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் மேயர் ஜெயா தலைமையில் நடைபெற்றது. 

இதில் சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்பு அகற்றம், பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைப்பது, கழி வறை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 12 மனுக்கள் பெறப்பட் டன. மனுக்களைப் பெற் றுக் கொண்ட மேயர், போக்குவரத்துக்கு இடை யூறாக சாலை மற்றும் முக் கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பழுதடைந்த தெரு விளக்குகளை விரை ந்து பழுது நீக்கம் செய்திட வும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தள ஆய்வு மேற் கொண்டு முழுமை யான நடவடிக்கை எடுப்பதோடு இதுகுறித்து மனுதாரர்களு க்கு பதில் அனுப்ப வேண் டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில்  நகர பொறியாளர் சந்திரன், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற்பொறியாளர்கள் அருணாசலம், நாகேஷ், உதவி ஆணையர்கள்  தன பால், தயாநிதி, பிரபுகுமார் ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், கண்ணன், அமுதவள்ளி, லட்சுமணமூர்த்தி, குமரே சன்,  திட்டப்பிரிவு உதவி செயற்பொறியாளர் கள் சிவ பாதம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 223 of 3988