Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி

Print PDF

தினமணி              31.12.2013

மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி

மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கோவை மாநகராட்சி மாமன்றத்தின் அவசரக் கூட்டம், மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி பார்த்திபன் பேசுகையில், ""மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் வயதான நபர்கள், மலையில் படி ஏற சிரமப்படுகின்றனர். எனவே, ரோப் கார் வசதி ஏற்படுத்திட வேண்டும்'' என்றார்.

 இதற்கு பதில் அளித்து மேயர் செ.ம.வேலுசாமி பேசுகையில், ""மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்தின் கொண்டு செல்லப்படும்'' என்றார்.

 அதைத் தொடர்ந்து, மருதமலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

 46 தீர்மானங்கள் நிறைவேற்றம்:  மாநகராட்சி அவசர கூட்டத்தில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தால் ரூ.1 லட்சம் அபராதம், பிளாஸ்டிக் பொருட்களை சாக்கடையில் போட்டால் அபராதம், மாநகராட்சி பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்தல் உள்பட மொத்தம் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினமணி              31.12.2013

பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்

பெரியநாயக்கன்பாளைத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.1.03 கோடி செலவில் கட்டப்பட்ட 36 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தை திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெ.நா.பாளையம் பேரூராட்சியில் 9-வது வார்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டடத்தில் எக்ஸ்ரே, பரிசோதனைக் கூடம், ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை கொடநாடு முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

விழாவில் பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், மாவட்ட கவுன்சிலர் டி.டி.கே.கதிர்வேல், கோவனூர் துரைசாமி, பேரூராட்சித் துணைத் தலைவர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமணி              31.12.2013

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம்

திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. தலைவர் சிராஜ்நிஷா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசிக்குமார், செயல் அலுவலர் வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் கோகிலா: எனது வார்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. ஆனால் எனக்கு எதுவும் தெரிவிக்காமல் நடைபெறுகிறது. அவசர அவசரமாக பணிகள் நடந்துள்ளது. முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. 

செயல் அலுவலர் வீரன்: இனி தகவல் தெரிவிக்கப்படும்.  

கவுன்சிலர் கந்தசாமி: பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்காமல் இன்னும் அனுமதி வழங்குவது ஏன்?

கவுன்சிலர்களிடம் திட்ட அனுமதி வாங்க கொடுக்கப்படும் அஜென்டாவில் செலவின தொகை, திட்ட எண்ணிக்கை ஆகியவை மறைக்கப்பட்டுள்ளன.

முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு விவாதங்கள் நடந்தன.

 


Page 229 of 3988