Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் 2வது நாளாக வீடுகள் அகற்றம்

Print PDF

தினகரன்           30.12.2013

ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் 2வது நாளாக வீடுகள் அகற்றம்

துரைப்பாக்கம், : மாநகராட்சி 15வது மண்டலம் 194வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையையொட்டி உள்ள பெரிய சித்திரகுளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 12 வணிக வளாகங்கள் கலெக்டர் உத்தரவின்படி நேற்று முன்தினம் அகற்றப்பட்டன.

இதையடுத்து நேற்று தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சென்று அங்கிருந்த 20 வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தாசில்தார் ரவிச்சந்திரன் கூறுகையில், இங்கு வசித்தவர்களை தற்காலிகமாக காரப்பாக்கத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கவும், உணவு வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்று இடம் கோரி மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து மேலதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வீட்டின் கூரையை அங்கு வசிப்பவர்களே அகற்றினர். இதில் ஜோசப் (40) என்பவர் தனது வீடடு கூரையை அகற்றியபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

சந்தப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் லாரிகள் மூலம் விநியோகம்

Print PDF

தினகரன்           30.12.2013

சந்தப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் லாரிகள் மூலம் விநியோகம்

திருக்கோவிலூர், : திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக வறட்சி காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் மட்டம் குறைந்ததால் ஆங்காங்கே குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் சாலைமறியல், பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

இதையடுத்து தேமுதிக வெங்கடேசன் எம்எல்ஏ திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதாக உத்தரவாதம் அளித்தார். அதன்படி திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தப்பேட்டையில் உள்ள 14, 15, 16, 17, 18 ஆகிய 5 வார்டுகளுக்கும் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிக சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த குடிநீர் வினியோகம் செய்யும் பணியினை மாவ ட்ட துணை செயலாளர் உமாசங்கர், ஒன்றிய செயலா ளர் காமராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் ஆதன்ரவி, அஷ்ரப்அலி, சாசிஅழகிரி, வினோத், கபூர்கான், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தேனி புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

Print PDF

தினமணி              30.12.2013

தேனி புதிய பஸ் நிலையம் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்

தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கர்னல்.ஜான் பென்னிகுயிக் நினைவு புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை (டிச.30) காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைக்கிறார். 

 தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை வால்கரடு பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான 7.35 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 2010, டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள், கடந்த 2011-ம் ஆண்டு ரூ.15.25 கோடியாக மறு மதிப்பீடு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளது. புதிய பஸ் நிலையத்துக்கு பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல்.ஜான் பென்னிகுயிக் பெயரை சூட்டுவதாக கடந்த 2013, ஜன.15-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

  ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்றுள்ள தேனி புதிய பஸ் நிலையத்தில் 59 பஸ்கள் நிற்கும் வகையில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலைய வளாகத்துக்குள் 3 இடங்களில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், 2 உணவகங்கள், 67 கடைகள், 6 கட்டண கழிப்பறை, 2 இலவச கழிப்பறை, டிக்கெட் முன்பதிவு அறைகள், புறக்காவல் நிலையம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகம், ஓட்டுநர் ஓய்வறை, பூங்கா, செயற்கை நீரூற்று உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வனத்துறைக்கு குத்தகை: புதிய பஸ் நிலைய இடத்துக்கு நகராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 220 வீதம், 20 ஆண்டுகளுக்கு வனத்துறைக்கு குத்தகை தொகை செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

பஸ் நிலைய வளாக கடைகள், உணவகம், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் மூலம் நகராட்சி நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.2.25 கோடிக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 புதிய பஸ் நிலையத்தை திங்கள்கிழமை(டிச.30) காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைக்கிறார். திறப்பு விழா ஏற்பாடுகளை சனிக்கிழமை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, தேனி நகர்மன்றத் தலைவர் எஸ்.முருகேசன், துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் பார்வையிட்டனர். 

 


Page 232 of 3988