Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Print PDF

தினமணி              30.12.2013

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

களம்பூர் பேரூராட்சி சார்பில் பஜார் வீதியில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு குறித்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 களம்பூர் பேரூராட்சி சார்பில் பஜார் வீதியில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு குறித்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜராணி முன்னிலை வகித்தார்.

 இதில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஏடிஸ் கொசு பற்றியும், இதனால் ஏற்படும் நோய் குறித்தும் திருச்சி கலைக் குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

சேலம் மாநகராட்சிக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம்

Print PDF

தினமணி              30.12.2013

சேலம் மாநகராட்சிக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம்

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகத்துக்கு ரூ.7.68 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்ஸிங் முறையில் அடிக்கல் நாட்டுகிறார்.

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகம் அரசு அதிநவீன மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப அலுவலகங்களின் எண்ணிக்கையும், வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டிய நிலை உருவானது.

 இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இதையடுத்து, இப்போது உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.7.68 கோடியில் தரைத்தளம், இரண்டு மாடிகளைக் கொண்ட ஒருங்கிணைந்தக் கட்டடம் கட்ட அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளன.

 இந்த நிலையில், சேலம் மாநகராட்சியின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது. முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி முறையில் காலை 11 மணிக்கு புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 இதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வருக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஆணையர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

திருச்சியில் மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

Print PDF

தினமணி              30.12.2013

திருச்சியில் மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

திருச்சி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகே சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி வரும் திங்கள்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன.

  தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். இதில் ஏழை, எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான சுய தொழில் பயிற்சி, தொழில் தொடங்குவதற்கான மானியம், கடனுதவி வழங்கும் வங்கிகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

  மேலும், மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருள்களும் ஏராளம் வைக்கப்பட்டிருக்கின்றன. கண்காட்சி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

  சனிக்கிழமை மாலை இந்தக் கண்காட்சியை மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மேயர் அ. ஜெயா, மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்ஜோதி, மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டினர்.

 


Page 235 of 3988