Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சாலை மேம்பாட்டுப் பணிக்கு பூமிபூஜை

Print PDF

தினமணி              30.12.2013

சாலை மேம்பாட்டுப் பணிக்கு பூமிபூஜை

கரூரில் ரூ. 2.93 கோடியில் நடைபெறவுள்ள சாலை மேம்பாட்டு பணிக்கான பூமிபூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

கரூர் வட்டம் புலியூர் பேரூராட்சியில் ரூ. 1.70 கோடியில் வீரராக்கியம் முதல் சுக்காலியூர் வரை சாலை மேம்பாட்டுப் பணி, அப்பகுதியில் 3 சிறுபாலங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. பாலராஜபுரம் ஊராட்சியில் ரூ. 1.23 கோடியில் சிறுபாலம் கட்டுதல் மற்றும் 1.5 கி.மீ. தொலைவில் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ. 2.93 கோடியில் பணிகள் நடைபெற உள்ளன.

இதற்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா தலைமை வகித்தார். கரூர் எம்.பி. தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  செ. காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ரவிகார்த்திகேயன், செயற்பொறியாளர்கள் ஜெய்குமார், பாலசுப்ரமணி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குத்தாலம் பேரூராட்சியில்ரூ. 37 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி              30.12.2013

குத்தாலம் பேரூராட்சியில்ரூ. 37 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

குத்தாலம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் எம்.சி. பாலு தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொது சுகாதார பணிக்காக புதிதாக ஒரு டிராக்டர் டிப்பரும், ஒரு கழிவுநீர் வாகனமும் வாங்குவது, நபார்டு திட்டப்படி ரூ. 24 லட்சத்தில் ராஜகுடியானத் தெரு, ராஜதலையாரித் தெரு,ர ôஜ காலனி மற்றும் பொன்நகரில் தார்ச் சாலை அமைப்பது, ரூ. 3 லட்சத்தில் ஆதிதிராவிடர் மயானத்திற்கு சுற்றுச் சுவர் அமைப்பது,  மண்டல மானிய நிதியின் கீழ் ஏகேபி நகர், மேட்டுத் தெரு, விலாவடி காலனி தெருக்களில் சிமெண்ட் சாலைகள் ரூ. 6.83 லட்சத்தில் அமைப்பது என்பன உள்பட ரூ. 37 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்து   தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட முனிசிபல் காலனியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 31-ந்தேதி தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி            28.12.2013

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட முனிசிபல் காலனியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 31-ந்தேதி தொடங்குகிறது

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

2-வது கட்டமாக

கடந்த 2010 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு புகைப்படம் எடுக்கும் பணி ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எடுக்காமல் விடுபட்டவர்களுக்காக மீண்டும் புகைப்படம் எடுக்கும் பணி 2-வது கட்டமாக ஈரோடு மாநகராட்சி சார்பில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக நடந்து வருகிறது.

இதில் திண்டல் பகுதியில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து முடிந்து விட்டது. தற்போது திருநகர் காலனி பகுதியில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

31-ந்தேதி தொடங்குகிறது

இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மரப்பாலம், முனிசிபல் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான புகைப்படம் எடுக்கும் பணி வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்த பணி தொடர்ந்து வருகிற 5-ந்தேதி வரை பழைய வார்டு எண் அடிப்படையில் நடக்கிறது. புகைப்படம் எடுக்கும் இடம் மற்றும் பழைய வார்டு எண் ஆகியவை விவரம் வருமாறு:-

மரப்பாலம் பகுதி

பழைய 7-வது வார்டுக்கு உள்பட்ட அரசிளங்கோ வீதி, ஆறுமுகம் வீதி, அய்யம்பெருமாள் சந்து, குமணன் வீதி, மரப்பாலம் ரோடு வீதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, மருதவீராசாமி கோவில் சந்து, முத்துக்கருப்ப சந்து, பழனிசந்து, பரசுராம சந்து, தொப்பையர் சந்து, வையாபுரி சந்து, வீரப்ப வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

பழைய 8-வது வார்டுக்கு உள்பட்ட காவிரி ரோடு, கரிகாலன் வீதி, கிருஷ்ணமூர்த்தி தோட்டம் வீதி 1, 2, 3, 4, மரப்பாலம் மெயின்ரோடு, புதுக்காவிரி ரோடு, ஓங்காளியம்மன் கோவில் வீதி, பச்சியப்பா சந்து, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, ராஜராஜன் வீதி, ரங்கநாதன் வீதி 1, 2 ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

10, 11-வது வார்டு

பழைய 10-வது வார்டுக்கு உள்பட்ட காந்திபுரம் வீதி 1, 2, 3, கே.என்.கே. ரோடு மற்றும் கே.என்.கே. ரோடு வீதி 3, சுப்பையன் வீதி, பழைய 11-வது வார்டுக்கு உள்பட்ட மில் வீதி, வரகப்பா வீதி, ராஜாஜிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடம், ராஜாஜிபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கூடம் ஆகிய 2 இடங்களிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

முனிசிபல் காலனி

பழைய 12-வது வார்டுக்கு உள்பட்ட எ.பி.டி. ரோடு மற்றும் 1-வது வீதி, ஈ.வி.கே.சம்பத் சாலை, கோவலன் வீதி, கிருஷ்ணன் வீதி, செங்கோட சந்து, வி.சி.டி.வி. மெயின் ரோடு, வீதி 1, 2, 3, 4, 5, மற்றும்

பழைய 13-வது வார்டுக்கு உள்பட்ட அண்ணாமலை லே அவுட், கிருஷ்ணசாமி வீதி, முனிசிபல் காலனி ரோடு வீதி 1, 2, 3, 4, 5, பாப்பாத்திக்காடு வீதி 1, 2, திரு.வி.க. ரோடு, எல்.ஐ.ஜி.எச். காலனி 1-வது வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

புகைப்படம்

பழைய 14-வது வார்டுக்கு உள்பட்ட அகில்மேடு வீதி 4, 5, 6, 7, ஈ.வி.என். ரோடு, கண்ணகி வீதி, காசியண்ண வீதி, முனியப்பன் கோவில் வீதி, வடக்கு ஈஸ்வரன் கோவில் வீதி, கண்ணகி வீதி குறுக்கு சந்து ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

பழைய 15-வது வார்டுக்கு உள்பட்ட அகில் மேடு வீதி 1, 2, 3, கிழக்கு பெருமாள் கோவில் வீதி, முத்துசாமி வீதி, நாச்சியப்பா வீதி 1, 2, நேரு வீதி, பழனி மலை வீதி, பழனி மலை வீதி குறுக்கு சந்து ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அந்தந்த வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இந்த தகவல் ஈரோடு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 


Page 236 of 3988